Thursday, November 15, 2007

எஸ்.எம்.எஸ் காதல் கவிதை

( இக் கவிதைகள் மறுபதிப்பு)

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வாசிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான
கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.

உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது.

நான் ரோஜாவைப் போல்
அழகானவன் அல்ல-ஆனால்
என் மனம் ரோஜாவைவிட அழகானது;
ஏன் தெரியுமா?
அதில் நீ இருக்கிறாய்!

Monday, November 12, 2007

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் வலைப்பதிவுகள்

கணினியில் வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கணினியைத் தமிழில் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய உலகில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகளில் எழுதுவதற்கான வசதிகளை பிளாக்கர்.காம், வேர்ட்பிரஸ்.காம் உள்ளிட்ட பல தளங்கள் இலவசமாக வழங்குகின்றன. யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரில் இலவசமாக வலைப்பதிவுகளை ஆரம்பித்து தங்கள் கருத்துகளை எழுத முடியும். தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இதில் விவாதிக்க முடியும். கதை, கவிதை, கட்டுரை, திரைவிமர்சனம் என எழுதலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள தமிழ்த் திரட்டிகள் உள்ளன. இவைகள் இலவசமாக வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கின்றன. இதற்காகத் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழூற்று உள்ளிட்ட திரட்டிகள் செயல்படுகின்றன. எழுதுபவர்கள் இந்தத் திரட்டிகளில் தங்கள் வலைப்பதிவுகளை இணைத்துக் கொண்டால் ஒரே இடத்தில் உலகில் உள்ள அனைவரும் படிக்க முடியும்.

தமிழ்மணம் திரட்டியில் 2354 பேர் தங்கள் பதிவுகளை இதுவரை இணைத்துள்ளனர். இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 143 பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதேபோல் தேன்கூட்டில் 1874 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளனர். இந்திய மொழிகளில் தமிழில்தான் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வசதி வாய்ப்புகள் இருப்பதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இயங்குதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பலருக்குத் தேவை.

புதுச்சேரியில் இந்த வலைப்பதிவுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைக் கொண்டு செல்வது, இது தொடர்பான இயங்குதளங்களையும், தமிழ் மென்பொருள்களையும் அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பதிவுகளில் தமிழைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல உள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன்.

இதற்காக இவர்கள் டிசம்பர் 9-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளனர். இதில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார். இந்த அமைப்பைத் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணினி நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழின் பங்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற பயிற்சி பட்டறைகள் இதற்கு வலு சேர்க்கும்.

விழிப்புணர்வை ஏற்படுத்த புதுவையில் புதிய அமைப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரியில் நடைபெறும் வலைப்பதிவர் பயிற்சி பட்டறையில் பங்கேற்க வலைப்பதிவில் உள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்வது வரவேற்கப்படுகிறது.

இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் டிச.9-ம் தேதி தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது. ஒரு நாள் நடைபெறும் இப் பயிற்சி பட்டறையில் தமிழக அளவில் கணினி அறிஞர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனர்.

கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு போதிய பயிற்சி அளிப்பதற்காக இப் பயிற்சி பட்டறையை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் நாங்கள் நடத்துகிறோம்.

இப் பயிற்சி பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு தேவையான தமிழ் மென்பொருள்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்படும். மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் பயிற்சி பட்டறையில் 100 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். கணினியை பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளோம். பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவோர் முன் பதிவு செய்வது அவசியம். பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதுமானது.

பயிற்சி பட்டறையில் பங்கேற்க விரும்புவோர்

http://puduvaibloggers.blogspot.com

என்ற வலைதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு செல்: 94431 05825 என்ற கைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

நன்றி : தினமணி 12.11.2007

Sunday, November 11, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


அவளை என் இதயமே என்று-நான்

ஒரு போதும் சொன்னதில்லை...!

அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?

Tuesday, November 6, 2007

அரிசி கடத்தலுக்கு கடன் வழங்கிய வங்கி

திரைப்படங்களில் காட்சியாக்கப்படும் கற்பனை கதையை நிரூபிக்கும் உண்மைக் கதை இது. அதுவும் தேசத்துக்கு ஓர் அவமானத்தைத் தேடித் தந்துள்ள கடத்தல். மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தல், லாரியில் அரிசி கடத்தல் என்று கேள்விப்பட்டுள்ளோம். இது போன்ற வாகனங்களில் கடத்தல் பொருள்களை ஏற்றி அனுப்பினால் வழியில் போலீஸ், கலால்துறை அதிகாரிகளின் தொந்தரவு இருக்கும். ரயிலில் ஏற்றி அனுப்பினால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேரும். மேலும் ரயிலில் சரக்குச் செல்வதால் கடத்தல் தொழிலுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துவிடும்.
இப்படித்தான் புதுச்சேரியிலிருந்து ரயிலில் 3 முறை அரிசி சென்றுள்ளது. அது கடத்தலா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இப்போது 4-வது முறையாக ரயிலில் ரேஷன் அரிசி ஏற்றி அனுப்பும்போது 2400 டன் அரிசி சிக்கியது. ஏற்கெனவே 3 முறை அனுப்பும்போதும் ஒவ்வொரு முறையும் இதே அளவு அரிசி ரயிலில் சென்றுள்ளது.
இப்போது ஆந்திர மாநிலம் காக்கி நாடா பகுதியிலுள்ள பிக்காலூரூ என்ற இடத்துக்குக் கடத்த முற்பட்டபோது பிடிபட்டுள்ளது.
ஏற்கெனவே 2 முறை குவாஹாட்டிக்கும், ஒரு முறை வங்கதேசத்துக்கும் இதுபோல சரக்கு ரயிலில் அரிசி சென்றுள்ளதை ரயில்வே வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
ஏற்கெனவே வெளிநாட்டுக்குச் சென்ற அரிசி பாகிஸ்தான் நாட்டுக்கும் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் "தினமணி' நிருபரிடம் கூறினார்.
மேலும் ஏற்கெனவே எடுத்துச் செல்லப்பட்ட அரிசியும் ரேஷன் அரிசிதான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் சரக்கு ரயிலில் சர்வதேச அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
குடிமைப் பொருள் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 11 நாள்களாக அரிசி மூட்டைகளைச் சுமந்து கொண்டு சரக்கு லாரி புதுச்சேரி ரயில் நிலையத்திலேயே நிற்கிறது.
ரேஷன் அரிசி ஏது?:சென்னை சேத்துப்பட்டு பகுதியில் 7, மேயர் சுந்தரமூர்த்தி சாலையில் "அனந்தம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் செயல்படுவதாகவும், இந்த நிறுவனம் அரிசி வியாபாரம் செய்வதாகக்கூறியும் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ.10 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இப்போது அந்த முகவரியில் இந்த நிறுவனம் செயல்படவில்லை என்று போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர், தன் பெயரில் ரூ.5 கோடியும், நிறுவனத்தின் பெயரில் ரூ.5 கோடியும் 2005-ம் ஆண்டு இந்த வங்கியின் மும்பை பகுதி கிளையிலிருந்து கடன் பெற்றுள்ளார். கடனைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் இந்த வங்கி வசூல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வசூலித்துக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட் (சஹற்ண்ர்ய்ஹப் இர்ப்ப்ஹற்ங்ழ்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் கற்க்.) என்ற நிறுவனத்துடன் இந்த வங்கி ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஹைதராபாத்தில் ஒரு கிளையும் இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் முறையற்றது என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக இந்த வங்கியின் அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் எதுவும் தங்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முதல் கட்டமாக நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
இடைத்தரகு வேலை: நேஷனல் கொலாட்ரல் நிறுவனம் இந்த தனியார் வங்கிக்கு இடைத்தரகு வேலை செய்து கொடுத்துள்ளது.
கடனைத் திருப்பிக் கொடுக்காத சென்னையைச் சேர்ந்த நிறுவனம் புதுச்சேரியில் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த 2 கிடங்குகள் இவர்கள் கைவசம் வந்தன. தனியார் வங்கியின் ஒத்துழைப்புடன் கடந்த ஓராண்டாக இந்த 2 கிடங்குகளுக்கும் இவர்களே வாடகை கட்டி வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த 2 கிடங்குகளில் இருந்த அரிசியையும் விற்பனை செய்து அந்தப் பணத்தை இந்தத் தனியார் வங்கியிடம் அளிப்பதுதான் கொலாட்ரல் நிறுவனத்தின் இடைத்தரகு வேலை.
புதுச்சேரியில் 2 கிடங்குகளில் இருந்த அரிசியை பெங்களூரில் உள்ள பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளனர். இதை வாங்கிய பி.ஆர்.எஸ். நிறுவனம் ஆந்திரத்துக்கு இந்த அரிசியை எடுத்துச் செல்ல தனியாக சரக்கு ரயிலை புக்கிங் செய்துள்ளது. சரியான நேரத்தில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததால் இப்போது சிக்கியது. முறையாக விலாசம் இல்லாத ஒரு நபருக்கு, விற்பனை வரி செலுத்துபவரா, என்ன வியாபாரம் செய்கிறார் என்கிற விவரங்கள் எதையும் கேட்காமல், தகுந்த ஈடு எதுவுமே இல்லாமல் பத்து கோடி ரூபாய் வரை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் கொடுத்தது எப்படி? நாளைக்கே கள்ளக்கடத்தல் போல, போதைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கும், வெடிமருந்து விநியோகம் செய்வதற்கும் கேள்வி எதுவும் கேளாமல் இந்தத் தனியார் வங்கிகள் கடன் கொடுக்காது என்று என்ன நிச்சயம்?
உணவுப் பொருள் தடுப்புப் பிரிவுப் போலீஸ் கண்காணிப்பாளர்களும், குடிமைப் பொருள் அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிந்ததும், முதலில் இந்தச் சரக்கு எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பெங்களூர் பிரிவு மேலாளர் மாயமாய் மறைந்தது ஏன்? இப்போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ் நிறுவனத்தைக் கைகாட்டுவது ஏன்? பத்து கோடி ரூபாய் கடன் கொடுத்தது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியா அல்லது அவர்களது இடைத்தரகு நிறுவனமா?
புதுச்சேரி அரசின் ரேஷன் அரிசி கடத்தப்படவில்லை என்றால், அந்த அரிசி தமிழகத்திலிருந்துதான் கடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் ஏன் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படவில்லை. சோதனை செய்யாமல் இருப்பதுதான் சோதனைச் சாவடிகளின் வேலையா?
இந்தக் கடத்தல் பாடத்துக்குப் பிறகு நாம் கேட்கும் இன்னொரு கேள்வி இதுதான்:- ரயில்வே இன்னும் தனியார் மயமாகவில்லைதானே?
யார் இந்த அரிசி வியாபாரி?
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம்தான் ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் அவர் பெயரில் ரூ.5 கோடியும், இந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.5 கோடியும் இந்த வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளார்.
அவர் கொடுத்திருந்த சேத்துபட்டு முகவரி போலியானது என்று உணவுப் பிரிவு போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தைப் பிடிக்க தனிப்படை போலீஸôர் சென்னை விரைந்துள்ளனர். ஆறுமுகத்துக்குப் பின்னணியில் பல முக்கிய முகங்கள் மறைந்திருக்கும் என்றும் போலீஸôர் கூறுகின்றனர்.

மீதியிருக்கும் அரிசி எவ்வளவு?

புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்டுள்ள 2 கிடங்குகளில் ரயிலில் ஏற்றியது போக மீதி 1800 டன் அளவுக்கு அரிசி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அரிசி எங்கிருந்து வந்தது?

பிடிபட்டது ரேஷன் அரிசிதான். ஆனால் அது புதுச்சேரிக்கு எங்கிருந்து வந்தது?
புதுச்சேரி ரேஷன் கடைகளில் இது போன்ற ரேஷன் அரிசி போடுவதில்லை என்றும், இலவச அரிசி திட்டத்துக்கு வெளிமார்க்கெட்டில் இருந்துதான் புதுச்சேரி அரசு அரிசி வாங்கி மக்களுக்குக் கொடுக்கிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரிசியுடன் அலைந்த அதிகாரிகள்

புதுச்சேரியில் பிடிபட்ட இந்த அரிசியை நாங்கள் சோதனை செய்து கொடுக்க முடியாது என்று விழுப்புரத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான பரிசோதனைக் கூடத்தில் சொல்லிவிட்டதாக போலீஸôர் கூறுகின்றனர். எங்கள் மாவட்டத்தில் இது போன்ற பிரச்னை வந்தால்தான் சோதனை செய்வோம். வேறு இடத்தில் சிக்கிய அரிசியை சோதனை செய்யமாட்டோம் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களைத் தாண்டி வேறு மாநிலத்துக்குக் கடத்துவதாக இருந்த இந்த அரிசியைச் சோதனை செய்யச் செல்லும்போது மட்டும் எங்கிருந்தோ வந்துவிட்டது இந்த எல்லைப் பிரச்னை. அதனால் இந்த அரிசியின் மாதிரி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Sunday, October 14, 2007

ஏழைகளின் இரைப்பையை நிரப்புங்கள்

கவிஞர் தாராபாரதி

விதவித மான முன்னேற் றங்கள்
விண்ணைத் தொடுகிற நம்நாட்டில்-பல
வெறும்வயி றுகளோ மண்மேட்டில்!

சுதந்தர தினத்தில் காய்ச்சிய கஞ்சி
சுப்பன் வயிற்றுக்குப் போகவில்லை-அது
சுவரொட் டிக்கே போதவில்லை!

வறுமை தீர்க்கும் வளர்ச்சிப் பணியில்
வாக்குப் பெட்டியில் சோறுவரும்-தினம்
விளம்பரத் தட்டியில் வீடுவரும்!

தருமம் வளர்த்த தாய்த்திரு நாட்டில்
தருமச் சோறு ஒருகவளம்-அது
தவனை முறையில் வரும் அவலம்!

கூரையின் உச்சியில் ஏறிய கட்சிக்
கொடிமரங் களுக்குப் புத்தாடை-தந்தை
கூலியில் வாங்கிய சிற்றாடை!

கூரையின் கீழே சந்ததிகளுக்குக்
கொடியின் நிழலே மேலாடை-தெருக
குப்பைப் புழுதி மெய்யாடை!

`வந்தது விடுதலை' என்பது பாதி
வயிறுக களுக்குத் தெரியாது-அதன்
வாரிசு களுக்கும் புரியாது!

இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டை
இதயங் களிலே எழுதாதீர்- ஏழை
இரப்பை களிலே எழுதுங்கள்!

விலைமகளின் கண்ணீர்

கவிஞர் தராபாரதி
(மறுபதிப்பு)
பூப்பறியாத பருவத்திலே
பொதுமகளாய் போனவள் நான்;
யாப்பறியாத கவிதை என்னை
யார் யாரோ வாசித்தார்.

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற
என் மதம் மன்மதம்.

இனிப்புக் கடைநான் தசைப் பிண்டம்;
எல்லோருக்கும் திண்பண்டம்;
குனிந்து வருகிற நீதிபதி;
குற்றவாளியும் அடுத்தபடி.

தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.

மந்திரவாதியின் கைக்கோல் நான்;
மந்திரிமார்களுக்கும் வைக்கோல் நான்;
அந்தப்புறங்கள் சலித்தவருக்கு
அசைவ மனைவி ஆனவள் நான்.

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை;
நிரந்தரக் கணவன் வரவில்லை;
புதுமணப் பெண்போல் தினம்தோறும்;
பொய்க்கு இளமை அலங்கரம்.

தத்துவ ஞானிகள் மத்தியிலே
தசையவதானம் புரிகின்றேன்;
உத்தம புத்திரர் பலபேர்க்கு
ஒரு நாள் பத்தினி ஆகின்றேன்.

மேடையில் பெண்ணறம் பேசிய பின்- வந்து
மேதையும் என்னை தொட்டனைப்பான்;
நான் ஆடைகள் கட்ட நேரமின்றி
ஆண்களை மாற்றி கட்டுகிறேன்.

கூவம் நதிநான் தினம்தோறும்
குளித்த பிறகும் அழுக்காவேன்;
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்து பைசா கற்பூரம்.

உப்பு விலைதான் என் கற்புவிலை;
உலை வைக்கத்தான் இந்த நிலை;
தப்புதான் விட முடியவில்லை
தருமம் சோறு போடவில்லை.

-கவிஞர் தாராபாரதி
நன்றி: இது எங்கள் கிழக்கு.

Thursday, October 4, 2007

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்-ராமதாஸ் கருத்து


பொது வேலை நிறுத்தம் உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம் வெவ்வேறு விதமான தீர்ப்பளித்தது குறித்து தேசிய அளவில் பொது விவாதம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

தைலாபுரத்தில் அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

"மாநிலங்களின் நலனுக்காகவும், மக்களின் முன்னேற்றத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடுவது ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமைகள். இதன் ஒரு அங்கம்தான் வேலை நிறுத்தமும் போராட்டமும்.

கேரளத்தில் 1997-ம் ஆண்டு குறிப்பிட்ட தொழிற்சங்கம், குறிப்பிட்ட பிரச்னைக்காக நடத்திய வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இப்படி ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்காக நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்ற தீர்ப்பு, தற்போது பொதுவான சட்டமாக மாறியுள்ளது. இதன் விளைவாகத்தான் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

சட்டங்கள் இரு வகைப்படும். அதில் ஒரு வகை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இயற்றப்படுவது. மற்றொன்று நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காலப்போக்கில் கடைபிடிக்கப்பட்டு உருவான சட்டங்கள். இவற்றின் தன்மைகள் வேறு. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் காலப்போக்கில் உருவான சட்டங்களை நிலையாக பயன்படுத்தக் கூடாது. அண்மைக் காலமாக நீதிமன்றத் தீர்ப்பு வாயிலாக உருவாகும் சட்டங்கள் அதிகரித்து வருவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

27 சதவீத இடஒதுக்கீடுச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதம், ஆனால் வேலை நிறுத்தம் செய்த நாள்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை முன்மாதிரியாக எதிர்காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

குஜராத் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் சலுகை கேட்டு போராடியபோது இப் போராட்டத்தை தேசிய அவமானம் என்ற அளவுக்கு உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

இப்படி பொதுவான விஷயங்களில் முரண்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஆகவே இதை தேசிய அளவில் பொது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக நல ஆர்வலர்கள், துணிந்து தங்களது கருத்தை வெளியிட வேண்டும் என்றார் ராமதாஸ்.

நன்றி: தினமணி

Sunday, September 30, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


பன்னீர் வாசனைதான்...!
எத்தனை பேருக்கு தெரியும்?
அது பல ரோஜாக்களின்
கண்ணீர் என்று...!


நான் தூங்காமல் தவிக்கிறேன்...!
நீ நிம்மதியாக தூங்குகிறாயோ
இல்லையோ என்று...!

Monday, September 24, 2007

தமிழ்க் கணினி-புதுச்சேரியில் வலைபதிவர் பட்டறை

புதுச்சேரியில் பதிய பதிவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2007, 9 ஆம் நாள் இப்பயிற்சி வகுப்பு நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது முற்றிலும் புதியவர்களுக்கானதாகும். இதில் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, ஒருங்குறி எழுத்துறு பயன்படுத்துவது அதற்கான மென்பொருட்களை நிறுவுவது வலைத்தளங்களில் எழுதுவது உள்ளிட்டவற்றுக்கு நேரடி பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர.

இந்த பதிவர்களுக்கு ஏற்படும் தொழில் நுட்ப பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவே இந்த பட்டறையை நடத்துவது என கருதி தொடக்கத்தில் பேசிவந்த நிலையில் பின்னர் புதியவர்களுக்குமாக சேர்த்து மொத்தமாக 100 பேர்களுக்கு இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை மாலை என இரு வேளையும் நடைபெறும். காலை கணினி பற்றி பொதுவானத் தகவல்களும், மாலை பதிவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.

இந்த பதிவர் பட்டறை "தமிழ்க் கணினி"" என்ற பெயரில் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதன் நோக்கம் கணனி முழுமையும் தமிழ்படுத்த வேண்டும் என்பதுமாகும். இதனால், தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். அதனுடன் ஏகலப்பை, உள்ளிட்ட சென்னைப் பதிவர்கள் வழங்கிய மென்பொருட்களும், புதிய மென்பொருட்கள் பலவும் வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

இதில் தமிழ் 99 விசைப்பலகை பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக கணனியில் தமிழ் என்பது தொடர்பான விவரங்கள் அங்கிய ஒரு கணனி மலர் ஒன்று வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

தொடக்கமாக கணனி தொடர்பான தொழில் நுட்பம் அறிந்தவர்களை அழைத்து தொடங்கி வைப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.

தமிழ் நாடு அரசு செய்துள்ள பல பணிகளை புதுவை அரசும் மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தும் வகையில் புதுவை முதல்வரை அழைத்து இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக "சென்னை வலைப்பதிவுப் பட்டறை" போலவும் அதில் கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பட்டறையாக இது இருக்கலாம்.

"புதுவை வலைப்பதிவர் சிறகம்" என்ற பெயரிலான அமைப்பு இந்த பட்டறையை நடத்துவது எனவும் முடிவு செய்து
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் ஆர்வலர்கள், கணனி ஆர்வலர்கள், இணையப் பதிவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், சில திட்டங்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும்.

எல்லாமே இலவசமாக இல்லாமல் குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம் வசூலிப்பது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இம்முடிவு நிதி என்ற பிரச்சனையை அடிப்படையாய் கொண்டது அல்ல. இவ்வாறு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது என்பது திட்டமிட்ட 100 பேர் என எண்ணிக்கையை குறைத்து சிறப்பாக செய்ய இயலும் என்பதாலேயே இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு சலுகை உண்டு.

பதிவர்களின் ஆலேசனை வரவேற்கப்படுகிறது.

புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்காக,

இரா.சுகுமாரன்,
தொடர்பு எண்: 94431 05825

Thursday, September 20, 2007

ராமர்பால விவகாரம் - இந்தியவுக்கு தலைகுனிவு

இல்லாத ஒரு பாலத்தை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தி சேதுசமுத்திர திட்டத்தை முடக்கும் நோக்கில் மதவாத சக்திகள் தங்கள் செயல்பாட்டை முடுக்கிவிட்டுள்ளனர். உலக அளவில் இவர்களின் செயல்பாடு இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுதியுள்ளது.

இராவணன் சீதையை கடத்திச் சென்றபோது ராமர் சீதையை மீட்பதற்கு இலங்கை செல்ல அமைக்கப்பட்டது ராமர் பாலம். இது ராமாயணத்தில் சொல்லப்படும் செய்தி. பல கோடி மக்களின் நம்பிக்கை. இதை நம்பும் மக்கள் யாரும் சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சேதுசமுத்திரத் திட்டம் தென்னகத்துக்கு வளம் சேர்க்கும் என்றே நினைக்கின்றனர். ஆனால் மத உணர்வுகளை வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் சக்திகள் சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிராக களம் இறங்கியுள்ளன. இது தென்னகமக்களின் வாழ்வியல் ஆதாரத்தை அழிக்க நினைக்கும் வட இந்திய வெறியர்களின் கூட்டுச் சதி.

இவர்கள் வாதப்படி வைத்துக்கொண்டாலும் ராமர் பாலம் என்று சொல்லும் இடத்தில் வெறும் மணல் திட்டு மட்டுமே உள்ளது. ராமர் சீதையை மீட்ட பிறகு எதிரி படைகள் திரும்ப வராமல் இருப்பதற்கு அவரே பாலத்தை தகர்த்ததாகவும் கூறப்படுகிறது. வால்மீகி ராமாயணத்துக்கு ராஜாஜி எழுதிய உரையில் இச் செய்தி உள்ளது.
ராமர் பாலம் கட்டியதை நம்புபவர்கள், அவரே இடித்ததையும் நம்பித்தான் ஆக வேண்டும்.ஏற்கனவே இடிக்கப்பட்ட பாலத்தை இப்போது இடிக்கக் கூடாது என்று எதற்கு சர்ச்சை. அங்கு வெறும் மணல் திட்டுதானே உள்ளது. நீங்கள் கூறும் ராமபிரான்
உண்மையாக இருந்து, தற்போது உயிருடன் இருந்தால் பயன்பாட்டில் இல்லாத் பாலத்தை(மணல் திட்டை) இடிக்கக் கூடாது என்று கூறுவாரா. உங்களின் செயல்பாட்டுக்கு வெட்கித் தலைகுனிய மாட்டாரா.

இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பாக தென்னக மக்களின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் இவர்களின் செயல்பாட்டை நாம் ஓரணியில் இருந்து எதிர்க்க வேண்டும். உண்மையில் மதப்பிரச்சாரம் செய்யும் மகான்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் வரும் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிக்கலாம். அரசியல் பிழைப்புக்காக மத உணர்வுகளை தூண்டிவிடும் இவர்களை மத்திய அரசு கவனத்துடன் கையாள வேண்டும். இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கக் கூடாது. சேதுசமுத்திர திட்டத்தை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். இந்த மதவாதிகளின் மோசமான செயல்பாடுகள் உலக அளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை எற்படுத்தியுள்ளன.

உலக வங்கி குறித்து மக்கள் தீர்ப்பாயம்

கோ.சுகுமாரன்

புதுதில்லியில் 2007, செப்டம்பர், 21 முதல் 24 வரை 4 நாட்கள் உலக வங்கி குறித்து மக்கள் தீர்ப்பாயம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் மீது வளர்ச்சி என்ற பேரில், உலக வங்கியின் திட்டங்களால் எவ்வாறு நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என்பதை வெளிக் கொண்டு வருவதற்கான முன்முயற்சியே இந்த மக்கள் தீர்ப்பாயம்.

உலக வங்கி, அடித்தட்டில் உழலும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஏற்படுத்திய தாக்கங்கள்:
குறிப்பாக -

1)பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், ஆதிவாசிகள், விவசாயிகள்.

2)சுற்றுச் சூழல், மனித உரிமைகள்.

3)மிகப் பெரிய மூலதனம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக உலக வங்கியின் திட்டங்கள்.

4)சமூக வளர்ச்சிக்கானத் திட்டங்களாகிய வறுமை ஒழிப்பு, ஏற்றதாழ்வைக் குறைத்தல், உணவு, கல்வி, மருத்துவம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தலையிடுதல் (எடுத்துக்காட்டாக மானியம் வெட்டு).

5)அரசு, தனியார் துறையிலும் ஒளிவுமறைவின்மை, ஊழல், பதிலளிக்கும் கடமை ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள்.

6)நாட்டின் ஆளுகை, இறையாண்மை, ஜனநாயக மதிப்பீடுகள் மீதான தாக்கம்.

7)சமூகத்தில் உண்டாக்கப்படும் மோதல்கள், இராணுவமயமாக்கல்.

ஆகியவை குறித்து இத்தீர்ப்பாயத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

இதில், உலக வங்கித் திட்ட்த்தால் பாதிக்கப்பட்டோர், இவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கத்தினர், அரசுத் தரப்பினர், உலக வங்கிப் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

இத்தீர்ப்பாயத்தில், எழுத்தாளர்கள் அருந்த்திராய், மகேஸ்வதா தேவி, முன்னாள் நீதிபதிகள் பி.பி.சாவந்த், எச்.சுரேஷ், உஷா, சமூக ஆர்வலர்கள் மெகர் இஞ்சினியர், அருணா ராய், பேராசிரியர் அமித் பதூரி உள்ளிட்டவர்கள் நடுவர்களாக இருந்து வழிநடத்த உள்ளனர்.
சமூக ஆர்வலர் மேதா பட்கர், பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய், மனித உரிமை ஆர்வலர், மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பிரசாந்த் பூஷன், அர்ஷ் மந்தர் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளனர்.

இந்தியா முழுவதும், உலக அளவிலும் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இத்தீர்ப்பாயத்தை நடத்துகின்றன. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவையும் இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
இத்தீர்ப்பாயத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்துக் கொள்கின்றனர். புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், சென்னயிலிருந்து தோழமை அமைப்பு சார்பில் அ.தேவநேயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

உலக வங்கி தீர்ப்பாயம்

Friday, September 14, 2007

காற்றில் வந்த காதல் கவிதை


அறிவியல் காதல்
ஆக்ஸிஜனின் குறியீடு என்ன
என்று ஆசிரியர் கேட்டார்-நான்
உன் பெயரைச் சொன்னேன்;
மாணவர்கள் சிரித்தார்கள்;
ஆசிரியர் திகைத்தார்;
அவர்களுக்கெல்லாம் தெரியாது
நீதான் என் ஆக்ஸிஜன் என்று.

Sunday, August 19, 2007

எஸ்.எம்.எஸ். வாசகங்கள்

எஸ்.எம்.எஸ்ஸில் வந்த வாசகங்கள்)

நண்பனையும் நேசி
எதிரியையும் நேசி
நண்பன் உன் வெற்றிக்குத்
துணையாக இருப்பான்...!
எதிரி உன் வெற்றிக்கு
காரணமாக இருப்பான்...!

எப்போதும் சிரித்துக் கொண்டு
இருக்கும் மனிதனுக்குள் மிகப்பெரிய
சோகம் இருக்கும்.

Friday, August 17, 2007

எஸ்.எம்.எசஸ் வாசகம் - 3

உங்களை பார்த்து எந்த
பெண் ஆவது சிரித்தாளா?
கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்...!
இல்லையென்றால் கொஞ்ச நாளில்
ஊரே உங்களை பார்த்து சிரிக்கும்...!

Tuesday, August 14, 2007

தினமணி முன்னாள் ஆசிரியர் மறைவு


அரை நூற்றாண்டுப் பத்திரிகையாளரின் மறைவு!

ஏ.என்.சிவராமனுடன் இராம.திரு.சம்பந்தம்(வலது)


பத்திரிகை உலகில் ஜூனியர், சீனியர் என வயது வித்தியாசமின்றி அனைவராலும் "ஆர்எம்டி' என்றழைக்கப்பட்ட அரை நூற்றாண்டு கால பத்திரிகையாளரான இராம.திரு.சம்பந்தம் இப்போது நினைவாகி விட்டார்.

இளம் வயதில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கி பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து, ஒரு நாளிதழின் மிக உயர்ந்த பொறுப்பான ஆசிரியர் பதவி வரை உயர்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதக்கூடிய வல்லமை பெற்றவர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. முடித்தார்.

பி.ஏ. தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாகவே, தனது 22-வது வயதில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு' நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார்.

பின்னர், 1960-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீஸில்' இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார்.

இந்தச் செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, 1961-ல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார்.

கடும் உழைப்பாளியான இவர், படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைவர் என்ற நிலைகளுக்கு உயர்ந்தார்.

பின்னர், "தினமணி'யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, 2004-ல் தனது 69-வது வயதில் ஓய்வு பெற்றார்.

தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார்.

கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தார்.

இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார். தமிழ் உணர்வாளர்.

இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் "தினமணி'யில் வெளியிடப்பட்ட செய்திகளின் விளைவாகப் பெற்ற உதவிகளின் மூலம் பல நூறு ஏழை எளிய மாணவ, மாணவிகள், மருத்துவம், பொறியியல் உள்பட உயர்கல்வி பெற்றனர்.

பெங்களூர் அருகே இலங்கைத் தமிழ்க் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லத்தின் பரிதாப நிலைமை பற்றித் தினமணியின் முதல் பக்கத்தில் இவரால் வெளியிடப்பட்ட செய்தி, தினமணி வாசகர்களிடமிருந்து பல லட்சங்களை உதவியாகத் திரட்டித் தந்தது.

செறிவான விஷயங்களைக் கொண்ட சிறப்பு மலர்களை ஒரு நாளிதழால்தான் மிகச் சிறப்பாக வெளியிட முடியும் என "தினமணி'யில் சிறப்பு மலர்களை வெளிக்கொண்டுவந்தார்.

பொங்கல் மலர், மருத்துவ மலர், மகளிர் மலர், மாணவர் மலர், தீபாவளி மலர், ரமலான் மலர், கிறிஸ்துமஸ் மலர் என ஆண்டுதோறும் மலர்ந்தன.

விளம்பரத்தை விரும்பாமல் சேவை உள்ளத்துடன் செயல்படும் சமூக சேவகர்களை அடையாளம் கண்டு, பிரமாதமாகச் செய்திகளை வெளியிட்டு ஊக்குவித்தவர்.

ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த காலத்தில் தமிழுக்கு எத்தனையோ நல்ல, புதிய சொற்கள் அறிமுகமாக, நல்ல தமிழ் நாளிதழான "தினமணி', சம்பந்தம் காலத்தில் தமிழர் நாளிதழாகிக் கூடுதல் வாசகர் பரப்பை எட்டியது.

நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர், மனிதாபிமானம் மிக்கவர். பத்திரிகையாளர்களுக்குப் பயண அனுபவம் அவசியம் என்பதற்காகவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் மாநாடுகளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் அனைத்து நிலைகளிலுமுள்ள பத்திரிகையாளர்களை அனுப்பிவைத்தார்.

செய்திகளைத் தரும்போது முழுமையாகவும், அதே சமயம் தெளிவாகவும், சுருக்கமாகவும் எப்படித் தருவது என்பதை தனது அனுபவத்திலிருந்தே எளிமையாகக் கற்றுத் தந்தவர். சக பத்திரிகையாளர்களின் குடும்ப விஷயங்களைக் கூட விசாரித்து, சுக-துக்கங்களில் பங்குகொண்ட தோழர்.

காலையில் கண் விழித்தது முதல் இரவில் உறங்கச் செல்லும் வரை செய்தி, பத்திரிகை, அலுவலகம் என்றே தன் வாழ்நாளைக் கரைத்தவர்.

"பத்திரிகையாளன் என்பவன் 365 நாள்களும் இருபத்திநாலு மணி நேரமும் பத்திரிகையாளன்தான்; காலநேரமெல்லாம் அவனுக்குக் கிடையாது' என்று கற்பித்து அவரும் அவ்வாறே வாழ்ந்தார், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட.

பகல் 11 மணி முதல் இரவு 11 வரை அலுவலகம்தான் வாழ்க்கை. "ஆண்டுதோறும் விடுமுறை விட்டேதீர வேண்டிய மூன்று நாள்களும்தான் எனக்குக் கடினமான நாள்கள்' என்பார் சக பத்திரிகையாளர்களிடம்.

பொது நிகழ்ச்சிகள், மேடைகளை எப்போதுமே தவிர்த்து வந்தவர்.

இவரால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற பத்திரிகையாளர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவரின் மறைவின்போது, அந்த நகரின் தினமணி நிருபரிடம் "ஏம்ப்பா, அவருடைய படம் இருக்கிறதா?' என்று கேட்டு, இல்லை என்றதும், "அவர் சீரியசாக இருக்கும்போதே அதையெல்லாம் தயார்செய்து வைக்காமல் என்ன நிருபரப்பா?' என்றவர் சம்பந்தம்.

மிகவும் உடல்நலம் குன்றத் தொடங்கிய நிலையில், தன் மறைவுக்குப் பிறகு தகவலுக்காக எந்த நிருபரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, தன்னைப் பற்றியே ஒரு குறிப்பு -அவருக்குப் பிடித்த கறுப்பு மையிலேயே -எழுதிவைத்திருந்தார் ஆர்எம்டி.

நன்றி: தினமணி.

Monday, August 13, 2007

சுவாமி விவேகானந்தரின் அறவுரை - 2

நான் உண்மை வழி நிற்பவன். உண்மை ஒருபோதும் பொய்யோடு ஒன்று சேராது. உலகம் முழுவதுமே என்னை எதிர்த்து நின்றாலும், இறுதியில் உண்மை வெல்வது நிச்சயம்.

உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப்பற்றிச் செல். கருத்துகளை வாதத்திற்கு எட்டும் தொலைவரை செலுத்தி, முடிவுகளைப் பெறுக. கோழையும் வேடதாரியும் ஆகிவிடாதே.

யாகங்களும் முழங்காலிட்டுப் பணிதலும் பிரார்த்தனைகளும், முணுமுணுத்தலும் மதமாகாது. சிறந்த வீரச் செயல்களைத் துணிவோடு செய்ய நம்மைத் தூண்டி, நமது நினைவுகளை உயர்ந்த பூரண நிலையை உண்ரும்படி உயர்த்துமானால் அப்போதுதான் அவை நல்லவை.

Saturday, August 11, 2007

சுவாமி விவேகானந்தரின் அறவுரை


உங்களில் ஒவ்வொருவரும் பேராற்றல் படைத்தவராக வேண்டும். இது நிச்சயம் முடியும் என்றே நான் கூறுகின்றேன். கீழ்ப்படிதல், துணிவு, எடுத்த செயலில் விருப்பம் இம் மூன்றும் உங்களிடம் இருந்தால் எதுவும் உங்களைத் தடை செய்யாது.

தம்மிடம் நம்பிக்கை கொள்பவர்களே பெருமையும் வலிமையும் எய்தியுள்ளனர். எந்த நாட்டு சரித்திரத்திலும் என்றைக்கும் காணப்படுவது இதுவே.

Tuesday, August 7, 2007

காதல் எஸ்.எம்.எஸ் - 1


எஸ்.எம்.எஸ்ஸில் வந்தவை...

தேசியப் பறவையாய் நீ...!
தேசிய மலராய் உன் முகம்..!
உடன் எதற்கு தேசிய விலங்காய்
உன் அப்பா...!

அவள் வீட்டு அடுப்பெரிக்க
உதவியது...!
என் கவிதையின் காகிதங்கள்...!

உன் நெற்றிப் பொட்டு - என்
கவிதையின் முற்றுப்புள்ளி.

நான் காதல் என்னும் கிணற்றில்
விழுந்தேன்...!
அவள் கடைக்கண் என்னும்
கயிற்றை வீசினாள்...!
தூக்கிடவா...? தூக்கிலிடவா...?

எஸ்.எம்.எஸ் கலாட்டா - 2


எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது...
குடி குடியைக் கெடுக்குமாம்
இவர்களுக்கு எங்கே தெரியும்?
விற்பவன் குடி கோபுரம்போல் உயர்வது...!

Sunday, August 5, 2007

எஸ்.எம்.எஸ். கலாட்டா-1



எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது...

என் உயிர் போனால் அவளுக்கு அழுகை
வருமா என்பது எனக்குத் தெரியாது - ஆனால்
அவளுக்கு அழுகை வந்தால் என் உயிர்
போய்விடும்...!

நான் பிறக்கும்போது அழுதேன் - ஏன்
அழுதேன் என்பதை ஒவ்வொரு நாளும்
உணர்கிறேன்.

காதலியுங்கள் மனித நேயத்தை!
கைப்பிடியுங்கள் காந்தீயத்தை!

Friday, August 3, 2007

வள்ளலார் தத்துவம்


புண்ணைக் கட்டி அதன் மேல் ஒரு
புடவை கட்டி புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக் கொள்வார்-இவர்
கொள்ளிவாய் பேயைக் கட்டிக்
கொண்டாலும் பிழைப்பார்
மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற-இம்

மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக் கொண்டு
ஊர் வழிப்போகும் கிழக் கழுதை
வாழ்விலும் கடையெனல் ஆகுமே.

விளக்கம்: எலும்பின் மீது சதையைக் கட்டி, அதற்கு மேல் ஒரு புடவையை கட்டிக் கொண்டு புதுமைகள் காட்டிடும் பெண்ணைக் கட்டிக்கொள்வார், அவர் கொள்ளிவாய் பேயைக் கட்டிக் கொண்டாலும் பிழைப்பார். மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற இம் மடப் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்கும் போது, கழுதைமீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப்போல் உள்ளது. அதுவும் கண்ணைக் கட்டிக் கொண்டு செல்லும் கிழக்கழுதை மீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப் பார்ப்பது போல் உள்ளது என்கிறார் வள்ளலார்.

Sunday, July 29, 2007

பாற்கடல் கடையும் பத்திரிக்கைகள்

கவிஞர் தாராபாரதி

நூலறி வுக்குத் துணைசெய் யாமல்
நூற்றுக் கணக்காய் நம்நாட்டில்
பாலுற வுக்குப் பரிந்துரை செய்யப்
பத்திரி கைகள் பெருகிவரும்.

கத்தரி களுக்குத் தப்பிய காட்சி
பத்திரி கைகளில் வருகிறது;
சித்திரம் சிறுகதை நாவல் களிலே
சிற்றின் பம்தான் பெருகியது!

ஆணெழுத் தாளர் எழுது கோல்களில்
ஆடைகட் டாத எழுத்துக்கள்;
பெண்ணெழுத் தாளர் பிடித்திருந் தாலும்
நாணமில் லாத பேனாக்கள்!

உடலை மட்டும் வரைந்து விட்டு
ஒதுங்கிக் கொள்ளும் தூரிகைகள்;
உடையை அதன்மேல் மூடுவ தற்கு
ஒப்புக் கொள்ளா ஆசிரியர்!

துச்சா தனராய் இவர்கள் கூடித்
துகிலை பறித்து விடுகையிலே
அச்சு வாகனம் பருத்தி ஆலையா
ஆடை கட்டி விடுவதற்கு?

மூடியை திறந்தால் பேனா கூட
முகத்தைக் கவிழ்த்துக் கொள்கிறதே!
ஆடையைத் திறக்க அலையும் விரலோ
அதையே துணைக்கு அழைக்கிறதே!

பால்போல் வெள்ளைத் தாளை இவர்கள்
பாற்கடல் என்று கடைகின்றார்;
பாற்கடல் நஞ்சை வாசகக் கன்றுகள்
பருகுவ தற்குத் தருகின்றார்!

அழுக்கில் லாத கதைநா யகியை
அடிக்கடி குளிக்க வைக்கின்றார்;
நிழலில் நடத்தும் உடலுற வுக்கு
`நேர்முக வர்ணனை' செய்கின்றார்!

போதையைத் தூண்டும் மாத நாவல்கள்
பொழுதைப் போக்கும் வியாபாரம்;
ஆதர வளிக்கும் வாலிபத் தொகுதியில்
அச்சுக் காகித விபச்சாரம்!

அன்னை நாட்டில் அன்னிய நாட்டின்
அடையா ளங்களைப் பதிக்கின்றார்;
தன்னை வள்ர்க்கும் எழுது கோலின்
தர்மங் களையே துறக்கின்றார்!

மண்ணில் எழுதிக் கற்ற விரல்கள்
மண்ணின் மரபை மறப்பதுவோ?
கண்ணில் வளர்ந்த பண்பா டுகளைக்
கண்ணிமை வந்து எரிப்பதுவோ?

கள்ளிச் செடியை வளர்க்கத் தானா
காகித வயலில் `மைவிதைகள்'?
பள்ளி யறையும் குளிய லறையும்
மட்டும் தானா வீட்டறைகள்?

ஒழுக்கம் உயிரெனப் பேசும் நாட்டில்
உடல்கள் தானா மூலதனம்?
அழுக்கை விற்றுச் செல்வம் திரட்டும்
அந்தப் பலபேர் எந்தஇனம்?

பள்ளத் திற்குள் படிப்பவன் இருந்தால்
படைப்பா ளிக்குக் களியாட்டம்;
`கள்ளின் விசிறிகள்' உள்ள வரைக்கும்
காய்ச்சுப வர்க்குக் கொண்டாட்டம்!

நன்றி: இது எங்கள் கிழக்கு

Tuesday, July 24, 2007

மேலை நாட்டு வாசகம்



குறிக்கோள் இல்லாத
வாழ்க்கை...!
ரோஜாப் பூ
இல்லாத பூந்தோட்டம்
போன்றது.


படம்: ஆர்.தேவானந்த்,
சிங்கனூர்,

Saturday, July 21, 2007

எஸ்.எம்.எஸ். வாசகம்-3

சுல்தான், துபாய்.

"பத்து விரல்கள், நவக்கிரகங்கள்,
எண் திசைகள், ஏழு நிறங்கள்,
ஆறறிவு, பஞ்ச பாண்டவர்,
நாற்பருவங்கள், மூன்று தேர்வுகள்,
இரு பாலினங்கள், ஒரே தோழி
அது நீ மட்டும்தான்."

Tuesday, July 17, 2007

கல்லூரி-காதல்-எஸ்.எம்.எஸ்-2

எஸ்.கோபி, விவசாயக் கல்லூரி
பவானிசாகர்.

காற்றுக்கும் எனக்கும் சண்டை - உன்
இதயத்தை யார் முதலில்
தொடுவது என்று...!
நான்தான் காற்றுக்கு
விடுக்கொடுத்து விட்டேன் - உன்
மூச்சு திணறக் கூடாது என்பதற்காக.



குறிப்பு: இது போன்ற எஸ்.எம்.எஸ்.களை jayapragash.r@gmail.com என்ற e-mail முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் பெயர், ஊரை அவசியம் குறிப்பிடவும்.

Wednesday, July 11, 2007

உங்களுக்கும் கீழான மக்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள் : கோ.சுகுமாரன்

'‘நீயெல்லாம் செத்தா சந்நியாசித் தோப்பு சுடுகாட்டுல தான்டா புதைப்பேன்!’’ என்னை, நான் ஒரு சேகுவேரா போல நினைத்துக்கொண்டு அலைந்த மாணவப் பருவத்தில், என் அப்பா இப்படித்தான் திட்டுவார். காரணம், சந்நியாசித் தோப்பு சுடுகாடு... பாண்டிச்சேரியில் அனாதைப் பிணங்களைப் புதைக்கிற இடம். தான்தோன்றித்தனமாகத் தன் பையன் திரிகிறானோ என்ற பயம், கவலை, கோபம் அவருக்கு. ஆனால், இன்று அப்பா இருந்திருந்தால், எல்லா வகையிலும் நான் சரியாகத்தான் வாழ்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு இருப்பார்.

பள்ளிப் பருவத்தில், ஈழப் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்தது. மொத்தத் தமிழகமும் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்த காலத்தில், ‘இந்திய அரசே! இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பு. இல்லாவிட்டால் எங்களை அனுப்பு’ என்றெல்லாம் நாங்களும் போஸ்டர் ஒட்டிப் போராடுவோம்.

பள்ளிப் படிப்பை முடித்து, தாகூர் கலைக் கல்லூரியில் சேர்ந்தபோது பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலனின் நட்பு கிடைத்தது. மொழி, இனம், நாடு என்று தமிழ்த் தேசிய நலன்களைப் பேணும் கொள்கைகளைத் தீவிரமாக நானும் ஆதரித்தேன். தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் தமிழரசனின் தொடர்பு கிடைத்தது. பெரியவர் புலவர் கலியபெருமாளின் வழிகாட்டுதலில் தனித் தமிழ்க் கொள்கைகளை வலியுறுத்தி அமைப்பு கட்டினோம். 87-ல் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் திட்டமிட்டு தமிழரசன் கொல்லப்பட்ட பிறகும், நாங்கள் தொடர்ந்து இயங்கினோம். ஈழப் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, இந்தியாவும் தலையிட்டது. ஆனால், அது ஈழத் தமிழர்களை விலக்கிவிட்டு, இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டதும் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு.

அப்போது தூர்தர்ஷன் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவான பிரசாரத்தை முடுக்கிவிட, டி.வி. பெட்டி உடைப்புப் போராட்டம் நடந்தது. சென்னை, கத்திப்பாராவில் இருக்கிற நேரு சிலையை வெடி வைத்துத் தகர்க்கும் முயற்சி நடந்தது. கொடைக்கானல் டி.வி. டவரை குண்டு வைத்துத் தகர்க்கும் முயற்சி நடந்தது. இந்த இரண்டு வழக்கிலும் பொழிலனுடன் என்னையும் சேர்த்துக் கைது செய்தது காவல் துறை. 18 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து நாங்கள் விசாரிக்கப்பட்டோம். பின்னர், நான் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டேன்.

மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சிகளெல்லாம் மக்கள் ஆதரவில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் 18 நாள் சட்ட விரோதக் காவலில் இருந்த நாட்களும், சிறைச் சாலை அனுபவங்களும் என்னை மனித உரிமையின் பக்கம் திருப்பின. நான், ரவிக்குமார் எல்லாம் சேர்ந்து, 1989-ல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைத் தொடங்கினோம்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் பத்மினிக்குப் பாலியல் கொடுமை நடந்தபோது, சி.பி.எம். கட்சியுடன் இணைந்து நீதி கேட்டுப் போராடினோம். சம்பவம் நடந்த மூன்றாவது நாள், பத்மினியிடம் ஒரு வாக்குமூலம் பதிவுசெய்து அதை ஆயிரக்கணக்கில் அச்சடித்து மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம். அந்த வழக்கில் நாங்கள் பதிவுசெய்த அந்த வாக்குமூலம் ஒரு ரத்த சாட்சியாக இருந்து, பத்மினிக்குத் துன்பம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்ப உதவியாக இருந்தது.

அது போல, ரீட்டாமேரி வழக்கில் பேராசிரியர் கல்யாணியுடன் இணைந்து பணியாற்றினோம். பார்வதி ஷா கொலை வழக்கு, கோதண்டம் என்கிற இளைஞர் காவல் நிலையத்தில் கொல்லப்பட்டது என்று ஏராளமான அத்துமீறல்களில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தன் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

ஒரு சமூகம் நாகரிகமான முறையில் தன் குடிமக்களை நடத்துகிறதா என்பதை, அந்தச் சமூகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளையும் காவல் துறையையும் வைத்தே அளவிட முடியும் என்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெருமளவு உரிமை மீறல்கள் காவல் நிலையங்களிலோ, காவல்துறையினராலோதான் நடைபெறுகின்றன. சிறைச்சாலைகள் சித்ரவதைக் கூடங்களாக இருக்கின்றன.

புதுவையில், செக்குமேடு என்று பாலியல் தொழிலாளர்கள் வாழும் பகுதி இருக்கிறது. கமலா, கௌரி, மேனகா என மூன்று பெண் ஏஜென்ட்டுகள் பல பெண்களை வைத்து தொழில் செய்து வந்தார்கள். மாதா மாதம் அவர்களிடம் இருந்து மாமூல் வசூலிப்பது போதாதென்று அடி, உதை, சித்ரவதை, வழக்கு என்றும் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுக்காக நாங்கள் நீதி கேட்டுப் போராடினோம். அவர்களுக்கு மாற்று வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் அல்லது பாலியல் தொழிலை அங்கீகரியுங்கள் என்றோம். பாலியல் தொழிலை அங்கீகரிப்பதா என்று பலருக்கு அதிர்ச்சி!

படிப்பறிவில்லாத ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டால், தங்கள் அனுபவத்தில் இருந்து அவர்கள் மற்றவரின் உரிமை பாதிக்கப்படும் போது நிச்சயம் குரல் கொடுப்பார்கள். அத்தியூர் விஜயா இப்போது தன்னைப் போல பாதிக்கப்படுகிற பெண்களுக்காகக் குரல் கொடுக்க, காவல் நிலையங்களுக்குப் போகிறார். காவலர்கள் அவரை இப்போது மிக மரியாதையோடு நடத்துகிறார்கள். இதுதான் மனித உரிமையின் மகத்துவம்!

கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிக்க பழ.நெடுமாறன், கல்யாணி, நக்கீரன் கோபால், நான் எல்லோரும் காட்டுக்குள் போனோம். ராஜ்குமார் மீட்கப்பட்டார். இப்போது வீரப்பனைக் கொன்றாகிவிட்டது. ஆனால், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு சதாசிவம் கமிஷன் வழங்கச்சொன்ன நஷ்டஈட்டை இன்னும் முழுமையாகக் கொடுக்கவில்லை.

மரண தண்டனை, என்கவுன்ட்டர்கள், சட்டவிரோதக் காவல் சித்ரவதைகள், சாதிக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறை, குழந்தைகள் மீதான வன்முறை என இடத்துக்கு இடம் வன்முறையின் வடிவம் மாறுகிறது. இதுபற்றிய விழிப்பு உணர்வு பரவினால்தான், மக்களிடையே எழுச்சி ஏற்படும்.

நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் முகமது அப்சல் உட்பட யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்கிறோம். காந்தியைக் கொன்ற கோட்சே இன்றைக்கு இருந்திருந்தாலும், கோட்சேவுக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்லியிருப்போம். காரணம், காந்தியே தூக்குத் தண்டனையை எதிர்த்தார். தவிர, தண்டனையின் நோக்கம் குற்றவாளியைத் திருத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அரசும் பதிலுக்கு ஒரு கொலையைச் செய்யக் கூடாது!

இதைச் சொன்னால், விபசாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தேசத் துரோகிகளுக்கும் ஆதரவாகப் பேசுவதா எனச் சிலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ரௌடிகள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், தீவிரவாதிகள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கும் நம்மைப் போல மனித உரிமைகள் உள்ளன. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்கிறோம்.

சமீபத்தில், மும்பையில் என்கவுன்ட்டர்களுக்கு எதிரான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் தீர்க்கமாகச் சில விஷயங்களைப் பேசினோம். அது தமிழ்ச் சூழலுக்கும் பொருந்தும். ரௌடிகளை ஒழித்துவிட்டால், ரௌடியிசமே ஒழிந்துவிடும் என நினைப்பது தவறானது. காரணம், இங்கே ரௌடியிசம் என்பது அரசியலுடன் கலந்திருக்கிறது அதன் ஆணி வேரைக் கண்டுபிடித்துச் சரி செய்யாமல், ரௌடியிசத்தை சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்ப்பதால் ஒரு பயனும் ஏற்படாது!

வாழ்வியல் அறம்

அதிகாரத்துக்குப் பயப்படாமல், நேர்மையாக உண்மைகளைப் பேசுவது!

ரோல் மாடல்!

ஆந்திராவில், நக்சலைட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்குமிடையில் பாலமாகச் செயல்படும் மனித உரிமைப் போராளியான டாக்டர் கே.பாலகோபால்!

எதிர்காலக் கனவு!

மனித உரிமைகள் என்றாலே என்னவென்று தெரியாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்!

பிடித்த நபர்

தந்தை பெரியார்!

இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது...

உங்களுக்கு உரிமைகள் இருப்பதை உணருங்கள். அதை யாருக்காகவும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களுக்கும் கீழான மக்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள். அவர்களுக்குக் கைகொடுங்கள்!

பேட்டி கண்டவர்: டி.அருள் எழிலன்
படங்கள்: கே.ராஜசேகரன்

நன்றி: ஆனந்த விகடன்
www.kosukumaran.blogspot.com

Tuesday, July 10, 2007

அமெரிக்கா ஏதேச்சதிகார நாடு


பிடல் காஸ்ட்ரோ

அமெரிக்கா ஒரு எதேச்சதிகார கொடுங்கோல் நாடு. 1776-ல் அமெரிக்காவுக்கு சுதந்திரம் வழங்கினார்கள். அது தலை வணங்குவதற்கு உரியது. ஆனால் அதுவே அமெரிக்கா உலகின் எதேச்சதிகார நாடாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

கியூபாவின் அரசு அதிகாரி ஒருவரைக் கொண்டு எனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அமெரிக்காவின் செயல் வஞ்சகம் நிறைந்தது. மிகவும் ஒழுக்கக் கேடானது.

1959-ல் கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி செய்தபோது, காடுகளிலும், மலைகளிலும் மறைந்திருந்துள்ளேன். அதிர்ஷ்டமும், அனைத்து விஷயங்களிலும் கவனமாகச் செயல்படும் குணமுமே என்னைக் கொலை முயற்சிகளில் இருந்தும், ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்தும் தப்பிக்க உதவின. எண்ணிலடங்கா கொலை முயற்சிகளில் இருந்து நான் தப்பித்துள்ளேன்.

குறிப்பு: மேற்கண்ட இந்தச் செய்தியை 8-7-2007 ஞாயிற்றுக்கிழமை எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் எழுதியுள்ளார்.

Saturday, July 7, 2007

சிம்புவின் காதல் தத்துவம்


பத்திரி்கைகளில்




காதலிக்கும்போது ஒவ்வொரு
ஆண் மகனும் கைக்குழந்தை
ஆகிவிடுகிறான்...!
பெண்கள்தான் பொம்மையாய்
நினைத்து விளையாடி
விடுகிறார்கள்.

Friday, July 6, 2007

சிலுவையில் அறையப்பட்ட காதல்











உனது மணக்கோல
நினைவுகளே - என்னை
அலங்கோலமாக்கிவிட்டன!

உன்னை நினைத்த
பாவச் செயலுக்காக - என்னை
நித்தம் நித்தம் நானே
சிலுவையில் அறைந்துகொள்கிறேன்!

மரிக்கவும் மன்னிக்கவும்
நான் ஏசு கிறுஸ்துவல்ல;
நடந்ததை மறப்பதற்கே - என்னுள்
மரணப் போராட்டம்.

என் இதயத்தை சிலுவையில்
அடித்துவிட்டு அந்த ரத்தத்திலா
நீ பொட்டு வைக்கிறாய்...

முற்றுப்புள்ளிகூட இல்லாமல்
முடிகின்றது - இந்த
அப்பவியின் கல்லறை காதல்...

Wednesday, July 4, 2007

கல்லூரி-காதல்-எஸ்.எம்.எஸ்

கல்லூரி மாணவர்களிடையே பரவும் எஸ்.எம்.எஸ்.

நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன்-எனக்கு
இடஒதுக்கீடு வேண்டும்
உன் இதயத்தில்...!

கல்லூரி பேருந்தில் பயணம்
செய்யும் பெண்ணே...!
நீ என்ன பாபர் மசூதியா?
அனைவரும் உன்னை
இடிக்கப் பார்க்கிறார்கள்...!

பனித்துளி
இரவு முழுவதும்
அழகிய நிலவைப் பார்த்து
புல்லு விட்ட ஜொல்லு...!

Tuesday, July 3, 2007

எய்ட்ஸை ஒழிப்போம் வாருங்கள்

இரா.முத்துராஜ் பி.இ.

எதிர்க்க முடியா எச்.ஐ.வி-எதிர்
உயிரியைக் கொல்ல ஊடுருவி;
உடம்பின் மறவன் வெள்ளையிடம்;
இணைந்து பிளாஸ்மா கொள்ளையிடும்.

வியாதிகள் பெருக ஏற்பிடமாய்;
உடைந்து போவாய் வார்ப்படமாய்;
மனித உடம்பை மாற்றிவிடும்;
மரபுத் திறனை மாய்த்துவிடும்.

பாழும் பாலியல் கரம்பிடித்து;
பரவி பூமியின் தரம்கெடுத்து;
யுத்த காண்டமாய் உருவெடுத்து;
மொத்த பிண்டமாய் சாய்த்துவிடும்.

உற்றார் உறவினர் பெருகக் கொண்டு;
கற்றார் பெற்றார் பெரும்பலன் என்று;
மற்றார் மதித்து போற்றும்
தமிழ்மறை ஓதிய ஒருவனுக்கு ஒருத்தி-என்ற
வாழ்நெறி வாளைக் கொண்டு
களம் கானும் நாள்தான் என்று?
காத்திருப்பேன்! காத்திருப்பேன்!
கைகொடுங்கள் தோழர்களே.

Sunday, July 1, 2007

சாதியை ஒழிப்போம்

இரா.முத்துராஜ், பி.இ.

இனி ஏனடா இந்தச் சாதி?
இது தானா உங்கள் நீதி?
விடியாத இரவுக்குள்ளே-நாம்
வீழ்ந்து கிடந்தது போதும்.

நெடிதாக விரிந்த வானம்-உன்
நெற்றியின் வியர்வை குடிக்க;
படியாத இந்த பூமி;
பாதச் சுவடுகள் பதிக்க.

ஏங்கித் தவிக்குதடா-இன்னும்
எத்தனை தவங்களடா?
பொறுத்தது போதும் எழந்திரு;
புதுவிடியலைத் தேடி புறப்படு.

சலுகைகள் ஏற்க வேண்டாம்;
சம உரிமையை மீட்க வேண்டும்;
ஏழை பணக்காரன் இடைவெளி;
இனி முடிந்துபோன இறைபலி.

அடிமை விலங்கு அற வேண்டும்;
ஆதிக்கத்தின் தலை விழ வண்டும்;
கொடுமைப் பிணிகள் இனியில்லை-இது
கோரத் தாண்டவ முடிவெல்லை.

ஒன்றாய் பிறந்தவர் நாங்கள்;
ஒருதாய் மக்கள் நாங்கள்-என்று
சங்கதி சொல்லி பாடு-இது
சமத்துவ கவிதையின் வீடு.

கவிஞர் இளம்தென்றல் (எ) இரா.முத்துராஜ்
பி.இ. (எலக்ட்ரனிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ்)
3-ம் ஆண்டு,
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி,
மேல்மருவத்தூர்.

Saturday, June 30, 2007

அன்புக் காதலி










கவிஞர் தாராபாரதி

பூவிழியில் நானம் பிறக்கும்-அதை
புன்னகையும் வாங்கி வளர்க்கும்;
நாவழியில் அச்சமிருக்கும்-அதை
நகநுனியும் மிச்சம் பிடிக்கும்.

சேர்த்துவைத்து பார்க்கும் விழிகள்-அதில்
சிக்கனத்தை காட்டும் இமைகள்;
வார்த்தைகளை சொல்லும் மனது-அதை
வழிமறித்து கொள்ளும் உதடு.

உச்சிமுதல் பாதம் வரைக்கும்-மொழி
உவமைகளைத் தேடி தவிக்கும்;
கச்சிருக்கும் மார்பின் எடைக்கு-ஓர்
எச்சரிக்கை மங்கை இடைக்கு.

காற்றுபட்டு தேய்ந்த உடம்பு-என்
கண்கள்பட பூத்த அரும்பு;
நேற்று கண்ணில் மாலை கட்டினாள்-என்
நிழலுக்கின்று சேலை கட்டினாள்.

நன்றி: இது எங்கள் கிழக்கு

Friday, June 29, 2007

இலங்கை யுத்தம்










இரும்புக் கருவியின்
இரத்த பசிக்கு
விருந்து படைக்கிறது
தமிழன் இறைச்சி.

மனித வெடிகுண்டாய்-நீ
வெடிக்கும்போது-எங்கள்
மனம்தான் சிதறுகிறது.

எதிரும் புதிருமாய் இருக்கும்
இந்தியவும் பாகிஸ்தானும் கூட
இலங்கைக்கு உதவும் விஷயத்தில்
கைகோர்த்து நிற்கின்றன.

தனிஈழம் என்பது
கனவாகிவிடுமோ?
என்ற வினாமட்டுமே
தொக்கி நிற்கிறது.

Wednesday, June 27, 2007

முழு பூசனிக்காயை மறைத்தல்


கிருபானந்தவாரியார்

ஓர் கிராமத்தில் பூசனிக்காய் திருடன் இருந்தான். அவன் பூசனிக்காய் திருடியே பெரும் செல்வந்தனாகி விட்டான். அவன் வீட்டுக்கும் பூசனிக்காய் திருடன் வீடு என்ற பெயர் நிலைத்துவிட்டது. அவனது சந்ததிகள் நன்றாக படித்து பொறியாளராகவும், டாக்டராகவும் உருவாகி விட்டனர். ஆனால் பூசனிக்காய் திருடிய வீடு என்ற பெயர் மட்டும் மறையவில்லை.
யாராவது இவர்களை தேடி வந்தால்கூட கிராமத்தில் உள்ளவர்கள் பூசனிக்காய் திருடிய வீடா இதோ இங்கே உள்ளது என்று வழிகாட்டினர். இதைக் கேள்விப்பட்டு அந்த மருத்துவரும், பொறியாளரும் பெரும் சங்கடம் அடைந்தனர். இது தொடர்பாக ஞானி ஒருவரை சந்தித்து ஆலோசனைக் கேட்டனர். அவர் வீட்டின் மேல் மஞ்சல் துணியை கட்டுங்கள். யார் பசி என்று வந்தாலும் உணவு கிடைக்கும் என்று எழுதி வையுங்கள். யார் வந்தாலும் இல்லை என்று கூறாமல் உணவு அளியுங்கள் என்றார்.
அதன்படியே செய்து அனைவருக்கும் உணவு அளித்தனர். சில மாதங்கள் கழித்து பொறியாளரையும், மருத்துவரையும் தேடி சிலர் வந்தனர். கிராமத்தில் இவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வழி கேட்டனர். சோறு போடுகிறார்களே அந்த வீடா அது இங்கே உள்ளது என்று வழி காட்டினர். பூசனிக்காய் திருடிய வீடு என்பது மறைந்து, சோறு போடும் வீடு என்பது நிலைத்தது. இதுதான் முழு பூசனிக்காயை சோற்றால் மறைத்த கதை.

ஞானத் தீ


ஞனத் தீயில்
நீ எரிகிறாய்--நான்தான்
சாம்பலாகிறேன்.

Tuesday, June 26, 2007

எஸ்.எம்.எஸ் கவிதை-3


அன்பு என்பதற்கு
அர்த்தம் தேடி
அலைந்தேன்-நீ
என்பது தெரியாமல்!

Sunday, June 24, 2007

முதிர் கன்னியின் துயரம்

பாதித் தலைமுடி நரைச்சாச்சு;
பாழும் கனவுகள் கலைஞ்சாச்சு;
காதல் கணவனும் வரவில்லை-என்
கல்யாணமும் கை கூடவில்லை.

வந்த மாப்பிள்ளையோ குறைவில்லை;
சென்ற மாப்பிள்ளைகள் கணக்கில்லை-பொய்
காட்சிக்கு அடிக்கடி அலங்காரம்
கல்யாண சந்தை வியாபாரம்.

உள்ளம் வெறுத்து போயாச்சு-என்
உணர்வுகள் மறுத்து நாளாச்சு;
இதயம் வெடித்து துடிக்கிறது-என்
இளமையை இயற்கை தின்கிறது.

மாப்பிள்ளை நாடகம் முடிஞ்சாச்சு;
முதிர்கன்னி நிலைக்கு போயாச்சு;
நகைகள் வாங்க முடியாமல்-வெள்ளி
நரைகள் வாங்கி நிற்கின்றேன்.

இனி ஏனடா இந்தக் கொடுமை?
மாறுமா பெண்கள் நிலைமை?

Thursday, June 21, 2007

யார் ஞானிகள்?

காவி உடை அணிந்த பாவிகளும், வேதங்கள், உபநிடதங்களை கற்றவர்களும் மட்டுமே ஞானிகள் என்பதை போன்ற பொய்யான தோற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கூறும் நல்லுலகம் ஞானிகள் என்பதற்கு ஒரு சிறு விளக்கம் மட்டுமே கூறுகிறது. கொதிக்கும் சாம்பாரில் பல்லி விழுந்து விட்டால், சாம்பாருக்காக கவலைப்படுபவன் சாதாரணமானவன். பல்லிக்காக கவலைப்படுபவன் ஞானி. பகுத்தறிவாளர்களால் தூக்கி நிறுத்தப்படும் தமிழ் சில ஆன்மீகவாதிகளால் புறக்கணிக்கப்படுகிறது. தமிழில் வழிபாடு நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. தமிழ் தமிழருக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமரியாதையைத் துடைத்தெறிய விழிப்பபோடு இருங்கள்.

Wednesday, June 20, 2007

ஷேக்ஸ்பியரின் காதல் தத்துவம்

மூளை என்பது நமக்கு கிடைத்த
மிகப்பெரிய கொடை. அது
24 மணி நேரமும்,
வருடத்துக்கு 365 நாள்களும்
வேலை செய்கிறது.
சரியாக காதலிக்கும்போது மட்டும்
வேலை செய்வது கிடையாது.

Tuesday, June 19, 2007

எஸ்.எம்.எஸ். கிறுக்கல் - 2.











நானும் கவிஞனானேன்...!
புலமையால் அல்ல - உன்
புன்னகையால்...!

பார்த்தால் கவிஞனானேன்...!
சிரித்தால் பைத்தியமானேன்...!

Wednesday, June 13, 2007

எஸ்.எம்.எஸ். கிறுக்கல்


மலரே...!
நீ மலரும்போது என்னவளின்
முகத்தை பார்க்கிறேன்...!
நீ உதிரும்போது...
என்னை நான் பார்க்கிறேன்.

Friday, May 25, 2007

குறுந்தகவல் சேவை(எஸ்.எம்.எஸ்)

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வாசிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான
கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.

உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது.

நான் ரோஜாவைப் போல்
அழகானவன் அல்ல-ஆனால்
என் மனம் ரோஜாவைவிட அழகானது;
ஏன் தெரியுமா?
அதில் நீ இருக்கிறாய்!

Wednesday, May 16, 2007

விலைமகளின் கண்ணீர்

கவிஞர் தராபாரதி

பூப்பறியாத பருவத்திலே
பொதுமகளாய் போனவள் நான்;
யாப்பறியாத கவிதை என்னை
யார் யாரோ வாசித்தார்.

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற
என் மதம் மன்மதம்.

இனிப்புக் கடைநான் தசைப் பிண்டம்;
எல்லோருக்கும் திண்பண்டம்;
குனிந்து வருகிற நீதிபதி;
குற்றவாளியும் அடுத்தபடி.

தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.

மந்திரவாதியின் கைக்கோல் நான்;
மந்திரிமார்களுக்கும் வைக்கோல் நான்;
அந்தப்புறங்கள் சலித்தவருக்கு
அசைவ மனைவி ஆனவள் நான்.

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை;
நிரந்தரக் கணவன் வரவில்லை;
புதுமணப் பெண்போல் தினம்தோறும்;
பொய்க்கு இளமை அலங்கரம்.

தத்துவ ஞானிகள் மத்தியிலே
தசையவதானம் புரிகின்றேன்;
உத்தம புத்திரர் பலபேர்க்கு
ஒரு நாள் பத்தினி ஆகின்றேன்.

மேடையில் பெண்ணறம் பேசிய பின்- வந்து
மேதையும் என்னை தொட்டனைப்பான்;
நான் ஆடைகள் கட்ட நேரமின்றி
ஆண்களை மாற்றி கட்டுகிறேன்.

கூவம் நதிநான் தினம்தோறும்
குளித்த பிறகும் அழுக்காவேன்;
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்து பைசா கற்பூரம்.

உப்பு விலைதான் என் கற்புவிலை;
உலை வைக்கத்தான் இந்த நிலை;
தப்புதான் விட முடியவில்லை
தருமம் சோறு போடவில்லை.

-கவிஞர் தாராபாரதி
நன்றி: இது எங்கள் கிழக்கு.

Thursday, May 3, 2007

வணக்கம்!



என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள... கொஞ்சம் பொறுத்திருங்கள்...

அன்புடன்,
ஜெபி.