Thursday, June 21, 2007

யார் ஞானிகள்?

காவி உடை அணிந்த பாவிகளும், வேதங்கள், உபநிடதங்களை கற்றவர்களும் மட்டுமே ஞானிகள் என்பதை போன்ற பொய்யான தோற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கூறும் நல்லுலகம் ஞானிகள் என்பதற்கு ஒரு சிறு விளக்கம் மட்டுமே கூறுகிறது. கொதிக்கும் சாம்பாரில் பல்லி விழுந்து விட்டால், சாம்பாருக்காக கவலைப்படுபவன் சாதாரணமானவன். பல்லிக்காக கவலைப்படுபவன் ஞானி. பகுத்தறிவாளர்களால் தூக்கி நிறுத்தப்படும் தமிழ் சில ஆன்மீகவாதிகளால் புறக்கணிக்கப்படுகிறது. தமிழில் வழிபாடு நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. தமிழ் தமிழருக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமரியாதையைத் துடைத்தெறிய விழிப்பபோடு இருங்கள்.

No comments: