Friday, July 6, 2007

சிலுவையில் அறையப்பட்ட காதல்











உனது மணக்கோல
நினைவுகளே - என்னை
அலங்கோலமாக்கிவிட்டன!

உன்னை நினைத்த
பாவச் செயலுக்காக - என்னை
நித்தம் நித்தம் நானே
சிலுவையில் அறைந்துகொள்கிறேன்!

மரிக்கவும் மன்னிக்கவும்
நான் ஏசு கிறுஸ்துவல்ல;
நடந்ததை மறப்பதற்கே - என்னுள்
மரணப் போராட்டம்.

என் இதயத்தை சிலுவையில்
அடித்துவிட்டு அந்த ரத்தத்திலா
நீ பொட்டு வைக்கிறாய்...

முற்றுப்புள்ளிகூட இல்லாமல்
முடிகின்றது - இந்த
அப்பவியின் கல்லறை காதல்...

2 comments:

வனம் said...

நல்லாதான் இருக்கு ஜெயபிரகாஷ்

எனக்கும் இது சொந்த அனுபவம்

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் ராஜாவுக்கு, உங்களுக்கும் சொந்த அனுபவமா?