Tuesday, May 20, 2008

மே-22 வரை உயர்கல்வி கண்காட்சி

பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக உயர்கல்வி கண்காட்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இக் கண்காட்சி 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடை பெறுகிறது.

இக் கண்காட்ச்சியில் இப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலை வாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
விளக்கக் கையேடுகள், கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இக் கண்காட்சியில் வழங்குவதற்கு நிர்வாகத்தின்ர் முடிவு செய்துள்ளனர். மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன.
பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக இக் கண்காட்சி நடைபெறுகிறது.

Monday, May 19, 2008

அரசியல் களம்-ரஜினிகாந்தை பாராட்டும் அன்புமணி

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சி இல்லாமல் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பாராட்டினார். ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த 2 படங்களிலும் (சிவாஜி, சந்திரமுகி) புகை பிடிக்கும் காட்சி இல்லை என்று கூறி ரஜினிகாந்தை அன்புமணி புகழ்ந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியை ஹிந்தி நடிகர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அன்புமணி அறிவுரை கூறினார்.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியைத் தவிர்க்குமாறு ஹிந்தி நடிகர்களுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு ஹிந்தி திரையுலகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. திரைப்படங்கள் கலைப் படைப்பு இதில் அமைச்சர் தலையிடக் கூடாது என்று கண்டித்தனர். பிரபல நடிகர் அமிதாபச்சன், ஷாரூக்கான் வெளிப்படையாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவர்களுக்கு சுட்டிக்காட்டும் வகையில் ரஜினியை புகழ்ந்து பாராட்டி உள்ளார் அன்புமணி.

ரஜினி ஸ்டைலாக புகை பிடிப்பதால் அதனால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பலர் அந்த பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
ரஜினிகாந்தை கடுமையாக குறை கூறினார். குறிப்பாக பாபா படம் வெளிவந்தபோது அதில் ரஜினி ஸ்டைலாக புகை பிடிப்பார். அதை ராமதாஸ் கடுமையாக விமர்சித்தர். தற்போது
அன்புமணி சமீபத்தில் வெளியான் ரஜினியின் இரு படங்களிலும் புகை பிடிக்கும் காட்சி இல்லை என்றார் அன்புமணி.

Tuesday, May 13, 2008

காதல் கவிதை

கவிஞர் தாராபாரதி

இதயம் நீயே என் வானம்-உன்
இமைக்கு கீழே என் குடிசை;
உதயம் உனது பூ விழியில்-என்
உலகம் உனது காலடியில்.

முதலில் பார்த்த ஒரு கணத்தில்-நான்
முந்தைய பிறவி தொடர்பறிந்தேன்;
புதுமையான உணர்ச்சியடி-இது
போன பிறவி சொந்தமடி.

கூர்மையான நுன்னறிவு-உன்
குழந்தைப் பேச்சு பிடிவாதம்;
நேர்மையான நன் நடத்தை-உன்
நெஞ்சம் முழுதும் தன்னடக்கம்.

குனத்தில் எனது நகலானாய்-உயர்
கொள்கையில் எனது அச்சானாய்;
மனதில் எனது நினைவானாய்-உயிர்
மங்கை எனது நிழலானாய்.

Saturday, May 3, 2008

ஷேக்ஸ்பியரின் காதல் தத்துவம்

மூளை என்பது நமக்கு கிடைத்த
மிகப்பெரிய கொடை. அது
24 மணி நேரமும்,
வருடத்துக்கு 365 நாள்களும்
வேலை செய்கிறது.
சரியாக காதலிக்கும்போது மட்டும்
வேலை செய்வது கிடையாது.

Friday, May 2, 2008

நீதித்துறையில் இடஒதுக்கீடு:ராமதாஸ்


தமிழக மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரைகள், நீதித்துறையில் இடஒதுக்கீடு வழங்க வழிவகுத்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நமது அரசியல் சட்ட செயல்பாட்டினை ஆராய்ந்த நீதிபதி வெங்கடாசலய்யா குழு பரிந்துரை செய்தது. அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுபோல் சுதர்சன நாச்சியப்பன் குழு அறிக்கையை கிடப்பில் போடக் கூடாது.

விலைவாசி உயர்வு: விலைவாசி உயர்ந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால் மத்திய அரசுதான் காரணம் என்று மாநில அரசுகளும், மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் கூறி வருகின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழக நிதி அமைச்சர், விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம் காரணமல்ல, பணப்புழக்கம் அதிகரித்துள்ளதே காரணம் என்று கூறியுள்ளார். பணப்புழக்கம் அதிகரித்திருந்தால் 28 சதவிகித மக்கள் ஏன் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.
ஏழை, எளிய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை. கறுப்பு பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. கிராமங்களில் 10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் ரூ.10 லட்சத்துக்கு வாங்கப்படுகிறது. இதனால் நடுத்தர சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டும் விலை உயர்ந்துள்ளது. மணிலா விவசாயிகளிடம் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்கின்றனர்.
விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். விவசாயிகள் நாங்கள் வாழ்வதா? சாவதா? என்று கேட்கின்றனர். விதைகள், உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.

வேலையில்லாத் திண்டாட்டம்: வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற் சாலைகள் தேவை. ஆனால் வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறிக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து 49.59 லட்சம் இளைஞர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அடிக்கடி அறிவிப்புகளும் வெளிவருகின்றன.
இந்த அறிவிப்புகளை கூட்டிப்பார்த்தால் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். வேலை வேண்டி காத்திருக்கும் 50 லட்சம் பேரில் ஒரு லட்சம் பேருக்காவது வேலை கிடைத்திருக்குமா?.
தரமணியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க அரசு நிலம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஆனால் மகாபலிபுரம் சாலையில் ஐ.டி. தொழில் நுட்ப பூங்காவுக்காக 3.5லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட தளங்கள் காலியாக உள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக காலியாக இருக்கும் தளங்களுக்கு செல்லாமல், காலியாக இருக்கும் இடங்களை குறி வைக்கிறார்கள். தொழில் நுட்ப பூங்கா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது.
ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எத்தனை? இதனால் வேலைவாய்ப்பு பெற்றோர் எவ்வளவு பேர்? இவர்கள் யார்? என்பது குறித்து சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஹைதராபாத்தில் கிரீன்வேஸ் ஏர்போர்ட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 1999-ல் முடிவெடுக்கப்பட்டும் அவை செயல்படுத்தப்படவில்லை. இதை செயல்படுத்த வேண்டும். புதிய தொழிற்சாலைகள் தொடங்கும்போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு தொடர்பாக பாஜக நடத்தும் பந்த் போராட்டத்துக்கு பாமக ஆதரவு அளிக்காது.

டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் பெட்ரோலியம் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.