Tuesday, May 13, 2008

காதல் கவிதை

கவிஞர் தாராபாரதி

இதயம் நீயே என் வானம்-உன்
இமைக்கு கீழே என் குடிசை;
உதயம் உனது பூ விழியில்-என்
உலகம் உனது காலடியில்.

முதலில் பார்த்த ஒரு கணத்தில்-நான்
முந்தைய பிறவி தொடர்பறிந்தேன்;
புதுமையான உணர்ச்சியடி-இது
போன பிறவி சொந்தமடி.

கூர்மையான நுன்னறிவு-உன்
குழந்தைப் பேச்சு பிடிவாதம்;
நேர்மையான நன் நடத்தை-உன்
நெஞ்சம் முழுதும் தன்னடக்கம்.

குனத்தில் எனது நகலானாய்-உயர்
கொள்கையில் எனது அச்சானாய்;
மனதில் எனது நினைவானாய்-உயிர்
மங்கை எனது நிழலானாய்.

No comments: