Tuesday, October 5, 2010

சமீபத்தில் கேட்ட ஈழத்து மாணவனின் குரல்

எம் தேசம் தமிழ் ஈழம் ஈழத்தமிழராகிய எங்களின் தாய் தேசம். தமிழர் நாம் சீரும் சிறப்போடும் வாழ்ந்த தேசம். பல கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் புலவர்கள் வாழ்ந்த மண். வீரம் செறிந்த அரசர்களான சங்கிலியன் பண்டாரவன்னியன் போன்றோர் வாழ்ந்தமன். இலங்கையின் வடக்கிலு...ம் கிழக்கிலும் தமிழ் மன்னர்கள் ஆட்சிசெய்கையில் தெற்கில் சிங்களவர்கள் குடியேறினர். பல நூறு ஆண்டுகளாய் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இறுதியாக பிரித்தானியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிரித்தானியர்கள் தங்களின் ஆட்சிமுறையை சுலபமாக்க தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வடக்கு கிழக்கையும் (தமிழீழம்) சிங்களவர்கள் வாழ்ந்த தெற்கு மேற்கையும் ஒன்றாக இணைத்து ஸ்ரீலங்கா எனப் பெயரிட்டு ஒருநாடாக ஆட்சி செய்தனர் . பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்தது. பிரித்தானியர் இலங்கையை விட்டு செல்கையில் சிங்களவர்களிடம் ஆட்சியை விட்டுச்சென்றனர். அன்று முதல் சிங்களவர் தமிழர் மீதான அடக்குமுறையை மெல்லமெல்ல கட்டவிழ்த்தனர். தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது அகிம்சைப்போராட்டங்கள் சிங்கள காடையர்களால்வன்முறையின்மூலம் அடக்கப்பட்டது. சிங்களவனுக்கு அகிம்சை புரியாது என்பதை சிலவருடங்களின்பின்பே தமிழர் புரிந்துகொண்டனர். அடக்குமுறையை அடக்குமுறையின்மூலமேஎதிர்கொள்ளமுடியும் என ஆயுதப்போராட்டத்தை துடிப்பும் தமிழ்ப்பற்றும் கொண்ட இளம்தலைமுறை ஆரம்பித்தது. ஆயுதப்போராட்டம் பலபோராளிகுழுக்கழாக பல்வேறு பெயர்களில் பல்வேறு கொள்கைகளுடன் இயங்கியது. பலர் பின்பு தமிழர் உரிமைக்கான தமது போராட்டக் கொள்கையில் இருந்து விடுபட்டு. தமிழ் மக்களுக்கே தீங்கிலைத்தனர், இந்தியா பல போராளிக்குழுக்களுக்கு பயிற்ச்சியளித்தது அவர்களை தமது கட்டுப்பாட்டில் தமது நலனுக்காக பயன்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவின் கபடத்தனத்தை புரிந்து அவர்களின் பிடியில் இருந்து விலகினர். இதைப் பொறுக்காத இந்தியா உளவுப்பிரிவான ரோ மற்றைய போரளிக்குளுக்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. பல போராட்டக் குழுக்கள் ஒட்டுக்குழுக்களாக மாறியது. ஸ்ரீலங்கா இனவாத சிங்களராணுவத்தையும் இரக்கமற்ற இந்தியராணுவத்தையும் துரோகிகளான ஒட்டுக்குளுக்களையும் தாண்டி. எமது விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் எமது தமிழீழ தாயகத்தின் பல பகுதியிலிருந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து பல நூறு ஆண்டுகளின் பின். தமிழீழ மண்ணிலே தமிழர் தம்மை தமிழரே ஆண்ட சரித்திரம் படைத்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்மக்கள் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தனர். தமிழீழ மக்களுக்காக தமிழர் தாயகத்தில் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழீழ விவசாய பொருண்மியம், தமிழீழ மீன்வளத்துறை, சுய தொழில் ஊக்குவிப்புத்திட்டம், கால்நடை வளர்ப்புத்திட்டம் போன்றவை தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டங்களுக்கு மக்கள் முதலீடு செய்வதற்க்கு தமிழீழ மக்கள் வங்கி கடனுதவி செய்தது. மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக தமிழீழ போக்குவரத்து திணைக்களம் அமைக்கப்பட்டது. தாயகத்தில் மிகமிக குறைந்த அளவில் அரிதாக சிறு சிறு குற்ற செயல்கள் இடம்பெற்றது. அதனைத்தடுக்க தமிழீழ காவல்த்துறை நியமிக்கப்பட்டது. பிற்காலத்தில் காவல்த்துறை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து பிரிவு, சுங்கவியல் பிரிவு, குற்றப்பிரிவு, விசாரனைப்பிரிவுகளாக பல பரிமாற்றம் கண்டது. தமிழீழ நீதிமன்றில் சர்வதேச சட்டங்களுக்கு நிகரான சட்டங்கள் வகுக்கப்பட்டு தமிழீழத்தில் நீதி நிலைநாட்டப் பட்டது. தமிழீழ சட்டத்தை கற்ப்பிக்க தமிழீழச் சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது. இதில் பலர் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்து சட்டவல்லுனர்களாக சிறந்துவிளங்கினர் தமிழீழ மாணவர்களின் கல்விக்கு தமிழீழ கல்வித்திணைக்களம் பல உதவிகளைசெய்தது. தமிழீழத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழீழ வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு பணம் வைப்பிலிடப்பட்டதுதமிழீழ மக்களின் வாழ்க்கை போர்ச்சூழ்நிலையிலும் நின்மதியாக இருந்தது. அவர்கள் பொழுதைக்கழிக்க பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மாவீரர்நாள், கரும்புலிகள்நாள் மக்களால் ஒற்றுமையுடனும் எழுச்சியுடனும் நினைவுகூரப்பட்டது. அத்துடன் கேணல் கிட்டு, தியாகி திலீபன், அன்னை பூரணி, இரண்டாம் லெப்டினன்ட் மாலதி போன்ற பல போராளிகளினதும் தியாகிகளினதும் நினைவுதினங்கள் மக்களால் நினைவுகூரப்பட்டது. தமிழீழ மக்கள் சுதந்திரிமாக வாழ்ந்தாலும் அவர்கள் நித்தம் எதிரியின் போரை எதிர்கொண்டனர், இருப்பினும் நின்மதியாகவே வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சொந்த தாய்மடியாம் தமிழீழத் தாய் நாட்டில். அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசித்தனர். அவர்களை அவர்களே ஆண்டனர். அவர்களை அடக்கி ஆழ எவரும் இல்லை. தமிழர் அனைவரும் பல வருடங்களுக்குப்பிறகு தமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ்ந்தனர். அந்த தேசம் இன்று உலகவல்லாதிக்க நாடுகளின் துணையோடு இனவாத சிங்களத்தால் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர் நாம் ஒன்றாய் இணைந்து மீட்டெடுப்போம் எம் தாயகத்தை. எம் மக்கள் மீண்டும் சுதந்திரமாய் நிமிர்ந்துவாழ வழி செய்வோம். தமிழர் நாம் மீண்டும் எமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ, வேண்டும் எம் தமிழீழ தேசம்.

No comments: