Friday, September 25, 2009

நாளை வருவன் ஒரு மனிதன்



புரட்சிக்கமால், மட்டக்களப்பு

நாளை வருவன் ஒரு மனிதன்;
ஞாலத் திசைகள் கோலமிட
நாளை வருவன் ஒரு மனிதன்.

உள்ளத் தெளிவின் நிலவினிலே
ஒளிரும் நினைவாம் சுடரினிலே...
வெள்ளப் புனலின் கலப்பினிலே
விடியற் பரிதி உருவினிலே
நாளை வருவன் ஒரு மனிதன்!

காலச் சுழலின் சுழிதனிலே
கலந்து சுழலும் மேதையரின்
கோலக் கனவின் கருக்குழியில்
கோடி காலம் குடியிருந்தான் ...
நாளை வருவன் ஒரு மனிதன் !

மாநிலத்துக் கழனியினை
மாற்றி யுழக்கி வரப்பிட்டு
ஏணி பெற்ற வாழ்க்கையினை
எரிவிட்டாக்கும் நல்லுழவன் ...
நாளை வருவன் ஒரு மனிதன்!

சாதி ஒன்றாய் நிறமொன்றாய்
சமயம் ஒன்றாய் மொழியொன்றாய்
நீதி ஒன்றாய் நிலையொன்றாய்
நிரைகண் டாளும் விஞ்ஞானி
நாளை வருவன் ஒரு மனிதன்!

வானக் கூரைப் பந்தலின் கீழ்
வையகத்துப் பெருமனையில்
மானிடத்தின் பிள்ளைகளை
மருவி மகவாய் விருந்தோம்ப...
நாளை வருவன் ஒரு மனிதன்!

Wednesday, September 23, 2009

எஸ்.எம்.எஸ். கவிதைகள்

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வா
சிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான

கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.


உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது. 

இது புது மொழி

மலை  மீது ஏறிநின்றால் மலைகூட நம் காலுக்கு கீழ்தான்

புத்தர்

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை