Wednesday, April 30, 2008

வள்ளலார் தத்துவம்

புண்ணைக் கட்டி அதன் மேல்-ஒரு
புடவை கட்டி புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக் கொள்வார்-இவர்
கொள்ளிவாய் பேயைக் கட்டிக்கொண்டாலும் பிழைப்பார்
மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற-இம்
மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக் கொண்டு ஊர் வழிப்போகும்
கிழக் கழுதைவாழ்விலும் கடையெனல் ஆகுமே!

விளக்கம்: எலும்பின் மீது சதையைக் கட்டி, அதற்கு மேல் ஒரு புடவையை கட்டிக் கொண்டு புதுமைகள் காட்டிடும் பெண்ணைக் கட்டிக்கொள்வார், அவர் கொள்ளிவாய் பேயைக் கட்டிக் கொண்டாலும் பிழைப்பார். மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற இம் மடப் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்கும் போது, கழுதைமீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப்போல் உள்ளது. அதுவும் கண்ணைக் கட்டிக் கொண்டு செல்லும் கிழக்கழுதை மீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப் பார்ப்பது போல் உள்ளது என்கிறார் வள்ளலார்.

2 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வாழ்த்துகள் நண்பரே!

மு.இளங்கோவன்
புதுச்சேரி

Unknown said...

வள்ளலார் பதிவைப்போன்று மேலும் தத்துவப்பதிவுகள் போடவும். வாழ்த்துக்கள் ஜெயப்பிரகாஷ்