Sunday, August 19, 2007

எஸ்.எம்.எஸ். வாசகங்கள்

எஸ்.எம்.எஸ்ஸில் வந்த வாசகங்கள்)

நண்பனையும் நேசி
எதிரியையும் நேசி
நண்பன் உன் வெற்றிக்குத்
துணையாக இருப்பான்...!
எதிரி உன் வெற்றிக்கு
காரணமாக இருப்பான்...!

எப்போதும் சிரித்துக் கொண்டு
இருக்கும் மனிதனுக்குள் மிகப்பெரிய
சோகம் இருக்கும்.

Friday, August 17, 2007

எஸ்.எம்.எசஸ் வாசகம் - 3

உங்களை பார்த்து எந்த
பெண் ஆவது சிரித்தாளா?
கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்...!
இல்லையென்றால் கொஞ்ச நாளில்
ஊரே உங்களை பார்த்து சிரிக்கும்...!

Tuesday, August 14, 2007

தினமணி முன்னாள் ஆசிரியர் மறைவு


அரை நூற்றாண்டுப் பத்திரிகையாளரின் மறைவு!

ஏ.என்.சிவராமனுடன் இராம.திரு.சம்பந்தம்(வலது)


பத்திரிகை உலகில் ஜூனியர், சீனியர் என வயது வித்தியாசமின்றி அனைவராலும் "ஆர்எம்டி' என்றழைக்கப்பட்ட அரை நூற்றாண்டு கால பத்திரிகையாளரான இராம.திரு.சம்பந்தம் இப்போது நினைவாகி விட்டார்.

இளம் வயதில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கி பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து, ஒரு நாளிதழின் மிக உயர்ந்த பொறுப்பான ஆசிரியர் பதவி வரை உயர்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதக்கூடிய வல்லமை பெற்றவர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர், மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. முடித்தார்.

பி.ஏ. தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாகவே, தனது 22-வது வயதில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய "தமிழ்நாடு' நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார்.

பின்னர், 1960-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான "இந்தியன் நியூஸ் சர்வீஸில்' இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார்.

இந்தச் செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, 1961-ல் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார்.

கடும் உழைப்பாளியான இவர், படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைவர் என்ற நிலைகளுக்கு உயர்ந்தார்.

பின்னர், "தினமணி'யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, 2004-ல் தனது 69-வது வயதில் ஓய்வு பெற்றார்.

தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை "தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார்.

கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தார்.

இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார். தமிழ் உணர்வாளர்.

இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் "தினமணி'யில் வெளியிடப்பட்ட செய்திகளின் விளைவாகப் பெற்ற உதவிகளின் மூலம் பல நூறு ஏழை எளிய மாணவ, மாணவிகள், மருத்துவம், பொறியியல் உள்பட உயர்கல்வி பெற்றனர்.

பெங்களூர் அருகே இலங்கைத் தமிழ்க் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லத்தின் பரிதாப நிலைமை பற்றித் தினமணியின் முதல் பக்கத்தில் இவரால் வெளியிடப்பட்ட செய்தி, தினமணி வாசகர்களிடமிருந்து பல லட்சங்களை உதவியாகத் திரட்டித் தந்தது.

செறிவான விஷயங்களைக் கொண்ட சிறப்பு மலர்களை ஒரு நாளிதழால்தான் மிகச் சிறப்பாக வெளியிட முடியும் என "தினமணி'யில் சிறப்பு மலர்களை வெளிக்கொண்டுவந்தார்.

பொங்கல் மலர், மருத்துவ மலர், மகளிர் மலர், மாணவர் மலர், தீபாவளி மலர், ரமலான் மலர், கிறிஸ்துமஸ் மலர் என ஆண்டுதோறும் மலர்ந்தன.

விளம்பரத்தை விரும்பாமல் சேவை உள்ளத்துடன் செயல்படும் சமூக சேவகர்களை அடையாளம் கண்டு, பிரமாதமாகச் செய்திகளை வெளியிட்டு ஊக்குவித்தவர்.

ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த காலத்தில் தமிழுக்கு எத்தனையோ நல்ல, புதிய சொற்கள் அறிமுகமாக, நல்ல தமிழ் நாளிதழான "தினமணி', சம்பந்தம் காலத்தில் தமிழர் நாளிதழாகிக் கூடுதல் வாசகர் பரப்பை எட்டியது.

நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர், மனிதாபிமானம் மிக்கவர். பத்திரிகையாளர்களுக்குப் பயண அனுபவம் அவசியம் என்பதற்காகவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் மாநாடுகளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் அனைத்து நிலைகளிலுமுள்ள பத்திரிகையாளர்களை அனுப்பிவைத்தார்.

செய்திகளைத் தரும்போது முழுமையாகவும், அதே சமயம் தெளிவாகவும், சுருக்கமாகவும் எப்படித் தருவது என்பதை தனது அனுபவத்திலிருந்தே எளிமையாகக் கற்றுத் தந்தவர். சக பத்திரிகையாளர்களின் குடும்ப விஷயங்களைக் கூட விசாரித்து, சுக-துக்கங்களில் பங்குகொண்ட தோழர்.

காலையில் கண் விழித்தது முதல் இரவில் உறங்கச் செல்லும் வரை செய்தி, பத்திரிகை, அலுவலகம் என்றே தன் வாழ்நாளைக் கரைத்தவர்.

"பத்திரிகையாளன் என்பவன் 365 நாள்களும் இருபத்திநாலு மணி நேரமும் பத்திரிகையாளன்தான்; காலநேரமெல்லாம் அவனுக்குக் கிடையாது' என்று கற்பித்து அவரும் அவ்வாறே வாழ்ந்தார், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட.

பகல் 11 மணி முதல் இரவு 11 வரை அலுவலகம்தான் வாழ்க்கை. "ஆண்டுதோறும் விடுமுறை விட்டேதீர வேண்டிய மூன்று நாள்களும்தான் எனக்குக் கடினமான நாள்கள்' என்பார் சக பத்திரிகையாளர்களிடம்.

பொது நிகழ்ச்சிகள், மேடைகளை எப்போதுமே தவிர்த்து வந்தவர்.

இவரால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற பத்திரிகையாளர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவரின் மறைவின்போது, அந்த நகரின் தினமணி நிருபரிடம் "ஏம்ப்பா, அவருடைய படம் இருக்கிறதா?' என்று கேட்டு, இல்லை என்றதும், "அவர் சீரியசாக இருக்கும்போதே அதையெல்லாம் தயார்செய்து வைக்காமல் என்ன நிருபரப்பா?' என்றவர் சம்பந்தம்.

மிகவும் உடல்நலம் குன்றத் தொடங்கிய நிலையில், தன் மறைவுக்குப் பிறகு தகவலுக்காக எந்த நிருபரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, தன்னைப் பற்றியே ஒரு குறிப்பு -அவருக்குப் பிடித்த கறுப்பு மையிலேயே -எழுதிவைத்திருந்தார் ஆர்எம்டி.

நன்றி: தினமணி.

Monday, August 13, 2007

சுவாமி விவேகானந்தரின் அறவுரை - 2

நான் உண்மை வழி நிற்பவன். உண்மை ஒருபோதும் பொய்யோடு ஒன்று சேராது. உலகம் முழுவதுமே என்னை எதிர்த்து நின்றாலும், இறுதியில் உண்மை வெல்வது நிச்சயம்.

உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப்பற்றிச் செல். கருத்துகளை வாதத்திற்கு எட்டும் தொலைவரை செலுத்தி, முடிவுகளைப் பெறுக. கோழையும் வேடதாரியும் ஆகிவிடாதே.

யாகங்களும் முழங்காலிட்டுப் பணிதலும் பிரார்த்தனைகளும், முணுமுணுத்தலும் மதமாகாது. சிறந்த வீரச் செயல்களைத் துணிவோடு செய்ய நம்மைத் தூண்டி, நமது நினைவுகளை உயர்ந்த பூரண நிலையை உண்ரும்படி உயர்த்துமானால் அப்போதுதான் அவை நல்லவை.

Saturday, August 11, 2007

சுவாமி விவேகானந்தரின் அறவுரை


உங்களில் ஒவ்வொருவரும் பேராற்றல் படைத்தவராக வேண்டும். இது நிச்சயம் முடியும் என்றே நான் கூறுகின்றேன். கீழ்ப்படிதல், துணிவு, எடுத்த செயலில் விருப்பம் இம் மூன்றும் உங்களிடம் இருந்தால் எதுவும் உங்களைத் தடை செய்யாது.

தம்மிடம் நம்பிக்கை கொள்பவர்களே பெருமையும் வலிமையும் எய்தியுள்ளனர். எந்த நாட்டு சரித்திரத்திலும் என்றைக்கும் காணப்படுவது இதுவே.

Tuesday, August 7, 2007

காதல் எஸ்.எம்.எஸ் - 1


எஸ்.எம்.எஸ்ஸில் வந்தவை...

தேசியப் பறவையாய் நீ...!
தேசிய மலராய் உன் முகம்..!
உடன் எதற்கு தேசிய விலங்காய்
உன் அப்பா...!

அவள் வீட்டு அடுப்பெரிக்க
உதவியது...!
என் கவிதையின் காகிதங்கள்...!

உன் நெற்றிப் பொட்டு - என்
கவிதையின் முற்றுப்புள்ளி.

நான் காதல் என்னும் கிணற்றில்
விழுந்தேன்...!
அவள் கடைக்கண் என்னும்
கயிற்றை வீசினாள்...!
தூக்கிடவா...? தூக்கிலிடவா...?

எஸ்.எம்.எஸ் கலாட்டா - 2


எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது...
குடி குடியைக் கெடுக்குமாம்
இவர்களுக்கு எங்கே தெரியும்?
விற்பவன் குடி கோபுரம்போல் உயர்வது...!

Sunday, August 5, 2007

எஸ்.எம்.எஸ். கலாட்டா-1



எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது...

என் உயிர் போனால் அவளுக்கு அழுகை
வருமா என்பது எனக்குத் தெரியாது - ஆனால்
அவளுக்கு அழுகை வந்தால் என் உயிர்
போய்விடும்...!

நான் பிறக்கும்போது அழுதேன் - ஏன்
அழுதேன் என்பதை ஒவ்வொரு நாளும்
உணர்கிறேன்.

காதலியுங்கள் மனித நேயத்தை!
கைப்பிடியுங்கள் காந்தீயத்தை!

Friday, August 3, 2007

வள்ளலார் தத்துவம்


புண்ணைக் கட்டி அதன் மேல் ஒரு
புடவை கட்டி புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக் கொள்வார்-இவர்
கொள்ளிவாய் பேயைக் கட்டிக்
கொண்டாலும் பிழைப்பார்
மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற-இம்

மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக் கொண்டு
ஊர் வழிப்போகும் கிழக் கழுதை
வாழ்விலும் கடையெனல் ஆகுமே.

விளக்கம்: எலும்பின் மீது சதையைக் கட்டி, அதற்கு மேல் ஒரு புடவையை கட்டிக் கொண்டு புதுமைகள் காட்டிடும் பெண்ணைக் கட்டிக்கொள்வார், அவர் கொள்ளிவாய் பேயைக் கட்டிக் கொண்டாலும் பிழைப்பார். மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற இம் மடப் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்கும் போது, கழுதைமீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப்போல் உள்ளது. அதுவும் கண்ணைக் கட்டிக் கொண்டு செல்லும் கிழக்கழுதை மீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப் பார்ப்பது போல் உள்ளது என்கிறார் வள்ளலார்.