Monday, August 13, 2007

சுவாமி விவேகானந்தரின் அறவுரை - 2

நான் உண்மை வழி நிற்பவன். உண்மை ஒருபோதும் பொய்யோடு ஒன்று சேராது. உலகம் முழுவதுமே என்னை எதிர்த்து நின்றாலும், இறுதியில் உண்மை வெல்வது நிச்சயம்.

உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப்பற்றிச் செல். கருத்துகளை வாதத்திற்கு எட்டும் தொலைவரை செலுத்தி, முடிவுகளைப் பெறுக. கோழையும் வேடதாரியும் ஆகிவிடாதே.

யாகங்களும் முழங்காலிட்டுப் பணிதலும் பிரார்த்தனைகளும், முணுமுணுத்தலும் மதமாகாது. சிறந்த வீரச் செயல்களைத் துணிவோடு செய்ய நம்மைத் தூண்டி, நமது நினைவுகளை உயர்ந்த பூரண நிலையை உண்ரும்படி உயர்த்துமானால் அப்போதுதான் அவை நல்லவை.

No comments: