Thursday, November 15, 2007

எஸ்.எம்.எஸ் காதல் கவிதை

( இக் கவிதைகள் மறுபதிப்பு)

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வாசிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான
கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.

உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது.

நான் ரோஜாவைப் போல்
அழகானவன் அல்ல-ஆனால்
என் மனம் ரோஜாவைவிட அழகானது;
ஏன் தெரியுமா?
அதில் நீ இருக்கிறாய்!

Monday, November 12, 2007

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் வலைப்பதிவுகள்

கணினியில் வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கணினியைத் தமிழில் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய உலகில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகளில் எழுதுவதற்கான வசதிகளை பிளாக்கர்.காம், வேர்ட்பிரஸ்.காம் உள்ளிட்ட பல தளங்கள் இலவசமாக வழங்குகின்றன. யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரில் இலவசமாக வலைப்பதிவுகளை ஆரம்பித்து தங்கள் கருத்துகளை எழுத முடியும். தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இதில் விவாதிக்க முடியும். கதை, கவிதை, கட்டுரை, திரைவிமர்சனம் என எழுதலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள தமிழ்த் திரட்டிகள் உள்ளன. இவைகள் இலவசமாக வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கின்றன. இதற்காகத் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழூற்று உள்ளிட்ட திரட்டிகள் செயல்படுகின்றன. எழுதுபவர்கள் இந்தத் திரட்டிகளில் தங்கள் வலைப்பதிவுகளை இணைத்துக் கொண்டால் ஒரே இடத்தில் உலகில் உள்ள அனைவரும் படிக்க முடியும்.

தமிழ்மணம் திரட்டியில் 2354 பேர் தங்கள் பதிவுகளை இதுவரை இணைத்துள்ளனர். இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 143 பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதேபோல் தேன்கூட்டில் 1874 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளனர். இந்திய மொழிகளில் தமிழில்தான் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வசதி வாய்ப்புகள் இருப்பதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இயங்குதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பலருக்குத் தேவை.

புதுச்சேரியில் இந்த வலைப்பதிவுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைக் கொண்டு செல்வது, இது தொடர்பான இயங்குதளங்களையும், தமிழ் மென்பொருள்களையும் அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பதிவுகளில் தமிழைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல உள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன்.

இதற்காக இவர்கள் டிசம்பர் 9-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளனர். இதில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார். இந்த அமைப்பைத் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணினி நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழின் பங்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற பயிற்சி பட்டறைகள் இதற்கு வலு சேர்க்கும்.

விழிப்புணர்வை ஏற்படுத்த புதுவையில் புதிய அமைப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரியில் நடைபெறும் வலைப்பதிவர் பயிற்சி பட்டறையில் பங்கேற்க வலைப்பதிவில் உள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்வது வரவேற்கப்படுகிறது.

இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் டிச.9-ம் தேதி தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது. ஒரு நாள் நடைபெறும் இப் பயிற்சி பட்டறையில் தமிழக அளவில் கணினி அறிஞர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனர்.

கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு போதிய பயிற்சி அளிப்பதற்காக இப் பயிற்சி பட்டறையை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் நாங்கள் நடத்துகிறோம்.

இப் பயிற்சி பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு தேவையான தமிழ் மென்பொருள்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்படும். மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் பயிற்சி பட்டறையில் 100 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். கணினியை பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளோம். பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவோர் முன் பதிவு செய்வது அவசியம். பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதுமானது.

பயிற்சி பட்டறையில் பங்கேற்க விரும்புவோர்

http://puduvaibloggers.blogspot.com

என்ற வலைதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு செல்: 94431 05825 என்ற கைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

நன்றி : தினமணி 12.11.2007

Sunday, November 11, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


அவளை என் இதயமே என்று-நான்

ஒரு போதும் சொன்னதில்லை...!

அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?

Tuesday, November 6, 2007

அரிசி கடத்தலுக்கு கடன் வழங்கிய வங்கி

திரைப்படங்களில் காட்சியாக்கப்படும் கற்பனை கதையை நிரூபிக்கும் உண்மைக் கதை இது. அதுவும் தேசத்துக்கு ஓர் அவமானத்தைத் தேடித் தந்துள்ள கடத்தல். மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தல், லாரியில் அரிசி கடத்தல் என்று கேள்விப்பட்டுள்ளோம். இது போன்ற வாகனங்களில் கடத்தல் பொருள்களை ஏற்றி அனுப்பினால் வழியில் போலீஸ், கலால்துறை அதிகாரிகளின் தொந்தரவு இருக்கும். ரயிலில் ஏற்றி அனுப்பினால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேரும். மேலும் ரயிலில் சரக்குச் செல்வதால் கடத்தல் தொழிலுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துவிடும்.
இப்படித்தான் புதுச்சேரியிலிருந்து ரயிலில் 3 முறை அரிசி சென்றுள்ளது. அது கடத்தலா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இப்போது 4-வது முறையாக ரயிலில் ரேஷன் அரிசி ஏற்றி அனுப்பும்போது 2400 டன் அரிசி சிக்கியது. ஏற்கெனவே 3 முறை அனுப்பும்போதும் ஒவ்வொரு முறையும் இதே அளவு அரிசி ரயிலில் சென்றுள்ளது.
இப்போது ஆந்திர மாநிலம் காக்கி நாடா பகுதியிலுள்ள பிக்காலூரூ என்ற இடத்துக்குக் கடத்த முற்பட்டபோது பிடிபட்டுள்ளது.
ஏற்கெனவே 2 முறை குவாஹாட்டிக்கும், ஒரு முறை வங்கதேசத்துக்கும் இதுபோல சரக்கு ரயிலில் அரிசி சென்றுள்ளதை ரயில்வே வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
ஏற்கெனவே வெளிநாட்டுக்குச் சென்ற அரிசி பாகிஸ்தான் நாட்டுக்கும் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் "தினமணி' நிருபரிடம் கூறினார்.
மேலும் ஏற்கெனவே எடுத்துச் செல்லப்பட்ட அரிசியும் ரேஷன் அரிசிதான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் சரக்கு ரயிலில் சர்வதேச அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
குடிமைப் பொருள் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 11 நாள்களாக அரிசி மூட்டைகளைச் சுமந்து கொண்டு சரக்கு லாரி புதுச்சேரி ரயில் நிலையத்திலேயே நிற்கிறது.
ரேஷன் அரிசி ஏது?:சென்னை சேத்துப்பட்டு பகுதியில் 7, மேயர் சுந்தரமூர்த்தி சாலையில் "அனந்தம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் செயல்படுவதாகவும், இந்த நிறுவனம் அரிசி வியாபாரம் செய்வதாகக்கூறியும் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ.10 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இப்போது அந்த முகவரியில் இந்த நிறுவனம் செயல்படவில்லை என்று போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர், தன் பெயரில் ரூ.5 கோடியும், நிறுவனத்தின் பெயரில் ரூ.5 கோடியும் 2005-ம் ஆண்டு இந்த வங்கியின் மும்பை பகுதி கிளையிலிருந்து கடன் பெற்றுள்ளார். கடனைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் இந்த வங்கி வசூல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வசூலித்துக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட் (சஹற்ண்ர்ய்ஹப் இர்ப்ப்ஹற்ங்ழ்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் கற்க்.) என்ற நிறுவனத்துடன் இந்த வங்கி ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஹைதராபாத்தில் ஒரு கிளையும் இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் முறையற்றது என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக இந்த வங்கியின் அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் எதுவும் தங்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முதல் கட்டமாக நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
இடைத்தரகு வேலை: நேஷனல் கொலாட்ரல் நிறுவனம் இந்த தனியார் வங்கிக்கு இடைத்தரகு வேலை செய்து கொடுத்துள்ளது.
கடனைத் திருப்பிக் கொடுக்காத சென்னையைச் சேர்ந்த நிறுவனம் புதுச்சேரியில் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த 2 கிடங்குகள் இவர்கள் கைவசம் வந்தன. தனியார் வங்கியின் ஒத்துழைப்புடன் கடந்த ஓராண்டாக இந்த 2 கிடங்குகளுக்கும் இவர்களே வாடகை கட்டி வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த 2 கிடங்குகளில் இருந்த அரிசியையும் விற்பனை செய்து அந்தப் பணத்தை இந்தத் தனியார் வங்கியிடம் அளிப்பதுதான் கொலாட்ரல் நிறுவனத்தின் இடைத்தரகு வேலை.
புதுச்சேரியில் 2 கிடங்குகளில் இருந்த அரிசியை பெங்களூரில் உள்ள பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளனர். இதை வாங்கிய பி.ஆர்.எஸ். நிறுவனம் ஆந்திரத்துக்கு இந்த அரிசியை எடுத்துச் செல்ல தனியாக சரக்கு ரயிலை புக்கிங் செய்துள்ளது. சரியான நேரத்தில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததால் இப்போது சிக்கியது. முறையாக விலாசம் இல்லாத ஒரு நபருக்கு, விற்பனை வரி செலுத்துபவரா, என்ன வியாபாரம் செய்கிறார் என்கிற விவரங்கள் எதையும் கேட்காமல், தகுந்த ஈடு எதுவுமே இல்லாமல் பத்து கோடி ரூபாய் வரை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் கொடுத்தது எப்படி? நாளைக்கே கள்ளக்கடத்தல் போல, போதைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கும், வெடிமருந்து விநியோகம் செய்வதற்கும் கேள்வி எதுவும் கேளாமல் இந்தத் தனியார் வங்கிகள் கடன் கொடுக்காது என்று என்ன நிச்சயம்?
உணவுப் பொருள் தடுப்புப் பிரிவுப் போலீஸ் கண்காணிப்பாளர்களும், குடிமைப் பொருள் அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிந்ததும், முதலில் இந்தச் சரக்கு எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பெங்களூர் பிரிவு மேலாளர் மாயமாய் மறைந்தது ஏன்? இப்போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நேஷனல் கொலாட்ரல் மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ் நிறுவனத்தைக் கைகாட்டுவது ஏன்? பத்து கோடி ரூபாய் கடன் கொடுத்தது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியா அல்லது அவர்களது இடைத்தரகு நிறுவனமா?
புதுச்சேரி அரசின் ரேஷன் அரிசி கடத்தப்படவில்லை என்றால், அந்த அரிசி தமிழகத்திலிருந்துதான் கடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் ஏன் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படவில்லை. சோதனை செய்யாமல் இருப்பதுதான் சோதனைச் சாவடிகளின் வேலையா?
இந்தக் கடத்தல் பாடத்துக்குப் பிறகு நாம் கேட்கும் இன்னொரு கேள்வி இதுதான்:- ரயில்வே இன்னும் தனியார் மயமாகவில்லைதானே?
யார் இந்த அரிசி வியாபாரி?
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம்தான் ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் அவர் பெயரில் ரூ.5 கோடியும், இந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.5 கோடியும் இந்த வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளார்.
அவர் கொடுத்திருந்த சேத்துபட்டு முகவரி போலியானது என்று உணவுப் பிரிவு போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தைப் பிடிக்க தனிப்படை போலீஸôர் சென்னை விரைந்துள்ளனர். ஆறுமுகத்துக்குப் பின்னணியில் பல முக்கிய முகங்கள் மறைந்திருக்கும் என்றும் போலீஸôர் கூறுகின்றனர்.

மீதியிருக்கும் அரிசி எவ்வளவு?

புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்டுள்ள 2 கிடங்குகளில் ரயிலில் ஏற்றியது போக மீதி 1800 டன் அளவுக்கு அரிசி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அரிசி எங்கிருந்து வந்தது?

பிடிபட்டது ரேஷன் அரிசிதான். ஆனால் அது புதுச்சேரிக்கு எங்கிருந்து வந்தது?
புதுச்சேரி ரேஷன் கடைகளில் இது போன்ற ரேஷன் அரிசி போடுவதில்லை என்றும், இலவச அரிசி திட்டத்துக்கு வெளிமார்க்கெட்டில் இருந்துதான் புதுச்சேரி அரசு அரிசி வாங்கி மக்களுக்குக் கொடுக்கிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரிசியுடன் அலைந்த அதிகாரிகள்

புதுச்சேரியில் பிடிபட்ட இந்த அரிசியை நாங்கள் சோதனை செய்து கொடுக்க முடியாது என்று விழுப்புரத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான பரிசோதனைக் கூடத்தில் சொல்லிவிட்டதாக போலீஸôர் கூறுகின்றனர். எங்கள் மாவட்டத்தில் இது போன்ற பிரச்னை வந்தால்தான் சோதனை செய்வோம். வேறு இடத்தில் சிக்கிய அரிசியை சோதனை செய்யமாட்டோம் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களைத் தாண்டி வேறு மாநிலத்துக்குக் கடத்துவதாக இருந்த இந்த அரிசியைச் சோதனை செய்யச் செல்லும்போது மட்டும் எங்கிருந்தோ வந்துவிட்டது இந்த எல்லைப் பிரச்னை. அதனால் இந்த அரிசியின் மாதிரி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.