tag:blogger.com,1999:blog-35964632928977428962024-03-19T03:42:31.830-07:00எஸ்.ஆர்.மைந்தன்தமிழ் - தமிழர் நலனுக்கான எழுத்தும் செயலும்எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-21658981974037160332020-06-12T10:30:00.002-07:002020-06-12T10:30:19.980-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<iframe frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=IN&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=jayaprakash43-21&marketplace=amazon&region=IN&placement=B07PTLD8P9&asins=B07PTLD8P9&linkId=3ae52b70fd96031becbd64d5ddbd4411&show_border=false&link_opens_in_new_window=false&price_color=333333&title_color=0066C0&bg_color=FFFFFF" style="height: 240px; width: 120px;"><br> </iframe><br /></div>
எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-72784208345096516612017-03-03T10:25:00.002-08:002020-07-04T09:52:59.983-07:00தருமபுரி விவசாயி தற்கொலை: அன்புமணி இராமதாஸ் இரங்கல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<span style="font-size: 12.8px;">தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்த முனிராஜ் என்ற விவசாயி, வறட்சியால் பயிர்கள் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாமலும், கடன் சுமையை தாங்க முடியாமலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் பங்கேற்ற போது தான், முனிராஜின் இறப்பு செய்தி கிடைத்தது. ஒன்றரை ஏக்கரில் கடன் வாங்கி தக்காளி, கால்நடைப்புல் உள்ளிட்ட பயிர்களை முனிராஜ் பயிரிட்டிருந்தார். வறட்சியால் பயிர்கள் கருகியதாலும், கடன் பெற்று வாங்கியிருந்த கால்நடைகள் பால் தராததாலும் முனிராஜுக்கு ரூ.3.00 லட்சம் அளவுக்கு கடன்சுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடனை சமாளிப்பதற்கு வழி தெரியாத முனிராஜ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடுமையான வறட்சியால் உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், இழப்புகளும் இன்னும் குறையவில்லை என்பதையே இந்த சோக நிகழ்வு காட்டுகிறது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
முனிராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முனிராஜின் தற்கொலையை தனித்த நிகழ்வாக பார்க்காமல் தமிழகத்தில் நடந்து வரும் உழவர்கள் தற்கொலைகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். இனியும் இத்தகைய தற்கொலைகள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து உழவர் முனிராஜின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.</div>
<div class="yj6qo ajU" style="background-color: white; color: #222222; cursor: pointer; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin: 2px 0px 0px; outline: none; padding: 10px 0px; width: 22px;">
<div aria-label="Show trimmed content" class="ajR" data-tooltip="Show trimmed content" id=":ol" role="button" style="background-color: #f1f1f1; border: 1px solid rgb(221, 221, 221); clear: both; line-height: 6px; outline: none; position: relative; width: 20px;" tabindex="0">
<img class="ajT" src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" style="background: url("//ssl.gstatic.com/ui/v1/icons/mail/ellipsis.png") no-repeat; height: 8px; opacity: 0.3; width: 20px;" /></div>
</div>
</div>
எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-81954505043646254122017-03-03T10:22:00.001-08:002020-07-04T09:53:00.018-07:00டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசு பதில் மனு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
*பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 325 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.*</div>
<div dir="ltr" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
*பள்ளி, கல்லூரி & கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி நாராயணன் தாக்கல் செய்த வழக்கில் டாஸ்மாக் பதில் மனு.*</div>
<div dir="ltr" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
*பிப்.24 ஆம் தேதி மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 325 கடைகள் அடங்கும் என உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு.*</div>
</div>
எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-6444905741116673102017-03-03T10:15:00.002-08:002020-07-04T09:52:59.949-07:00பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் தருவதில் தெளிவான கொள்கை தேவை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; text-align: center;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் செயல்பட்டு வரும் பெப்சி, கோக் நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்பு ஆலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் நீதிபதிகள் ரத்து செய்திருக்கின்றனர்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
கங்கை கொண்டானில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கோகோ-கோலா நிறுவனத்தின் துணை அமைப்பான சவுத் இண்டியன் பாட்டிலிங் கம்பெனியும், பெப்சி நிறுவனத்தின் சார்பில் பிரதிஷ்டா நிறுவனமும் குடிநீர் தயாரித்து புட்டியில் அடைத்து அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் பெப்சி நிறுவனம் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரையும், கோக் நிறுவனம் 9 லட்சம் லிட்டர் தண்ணீரையும் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து பலரும் தொடர்ந்த பொதுநல வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், இரு நிறுவனங்களும் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க இடைக்காலத் தடை விதித்தது. அவ்வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பளித்த நீதிபதிகள், இடைக்காலத் தடையை நீக்கியதுடன், தொடர்ந்து தண்ணீர் எடுக்க அனுமதியளித்தும் ஆணையிட்டனர்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணி நீரை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு காரணம் அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொண்டது தான். வழக்கு விசாரணையின் போது, முழுக்க முழுக்க பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு சாதகமாகத் தான் தமிழக அரசு நடந்து கொண்டது. அந்த நிறுவனங்களின் வழக்குறைஞர்கள் எப்படி வாதாடினார்களோ, அதே கோணத்தில் தான் தமிழக அரசு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அதையேற்று தான், பெப்சி, கோக் நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அந்த வகையில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
அதேநேரத்தில், இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய சில வினாக்கள் தான் மிகவும் கவலையளிக்கின்றன. ‘‘ஆற்று நீரையும், நிலத்தடி நீரையும் பயன்படுத்தும் மற்ற ஆலைகளை எதிர்த்து வழக்குத் தொடராமல் பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடர்ந்திருப்பது ஏன்?’’ என்பது தான் நீதிபதிகள் எழுப்பிய வினா ஆகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலோ, சரியான புரிதல் இல்லாமலேயோ அப்படி ஒரு வினாவை நீதிபதிகள் எழுப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி நீதிபதிகளுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்புக்கும் விளக்கமளிக்க வேண்டியதும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகும். அனைத்துத் தொழிற்சாலைகளும் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன என்றாலும், அவை அனைத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது. அவை எடுக்கும் தண்ணீரின் அளவு, தொழிற்சாலைகளின் பயன்பாடு, அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தான் அவற்றை வகைப்படுத்த முடியும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயப்பட்டறை, குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களையும், உற்பத்தித் துறை நிறுவனங்களையும் ஒன்றாக பார்க்க முடியாது. கேரள மாநிலம் பிளாச்சிமடாவில் அமைக்கப்பட்டிருந்த கோகோ- கோலா நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் இப்படி ஒரு வினாவை எழுப்பவில்லை. மாறாக,‘‘நிலத்தடி நீர் என்பது அரசின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ள பொதுச்சொத்து ஆகும். மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில், அந்த வளத்தை தனியார் சுரண்டுவதை அனுமதிக்கும் உரிமை அரசுக்கு இல்லை’’என்று கூறியதுடன், தண்ணீருக்கு மாற்று ஆதாரங்களை ஏற்படுத்திக் கொண்டால் மட்டும் தான் கோகோ-கோலா ஆலையை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புக்கு கேரள உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஆணையிட்டார். இவ்வழக்கிலும் அதுபோன்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அது தான் இயற்கை நீதியாக இருந்திருக்கும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
அதேபோல், இந்த வழக்கிலும் தமிழக அரசு பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்திருக்கக் கூடாது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோகோ-கோலா ஆலை அமைக்கப்படுவதற்கும், அந்த ஆலை ஆற்று நீரை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திய போது, அதை மதித்து அந்த ஆலையை மூட ஆணையிட்ட தமிழக அரசு, இந்த விஷயத்தில் மட்டும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவும் சூழலில் பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு தண்ணீரை தாரை வார்ப்பது ஏற்க முடியாததாகும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஆலைகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். பெப்சி, கோக் உள்ளிட்ட சுற்றுச்சுழலை பாதிக்கக்கூடிய ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இதுகுறித்து தெளிவான கொள்கைகளை வரையறுத்து அதனடிப்படையில் மட்டுமே தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlwddxAWCim4sXTiu0fYqx39kT-WR9jTIYhZvWy3edUXgHI9Yy8-mhhDN69zG0HRQoYH1Yi0hmMx3kWj5giE0uUeInp500Y9MfLpb8uQfXCI14bLo2zecP1MzfXDFlygcSIUjoE9F2wNM/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlwddxAWCim4sXTiu0fYqx39kT-WR9jTIYhZvWy3edUXgHI9Yy8-mhhDN69zG0HRQoYH1Yi0hmMx3kWj5giE0uUeInp500Y9MfLpb8uQfXCI14bLo2zecP1MzfXDFlygcSIUjoE9F2wNM/s1600/download.jpg" /></a></div>
</div>
</div>
எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-75625760230292806822015-12-16T21:30:00.002-08:002020-07-04T10:00:41.720-07:00என் முதல் காதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் முதல் காதல் அவளோடு<br />
சில நேரங்களில் பகலிலும்,<br />
பல நேரங்களில் இரவு மின்னல்<br />
ஒளியிலும் அவள் முகம்<span class="text_exposed_show"><br /> பார்த்திருக்கிறேன்</span><br />
<div class="text_exposed_show">
என் மேல் விழுந்து<br />
மெய்சிலிர்க்க வைத்து<br />
என் உதடு வழி தாகம்<br />
தீர்ப்பவள்<br />
விவரம் தெரியும் முன்பிலிருந்தே<br />
அவளை எனக்கு தெரியும்<br />
பார்க்கும்போது மட்டும் பரவசம் அடைவேன்<br />
கைப்பேசி காதலுக்கு அவள்<br />
ஊரில் வசதியில்லை<br />
நாங்கள் பேசிக் கொள்வது<br />
வருடத்துக்கு சில நாள்கள்<br />
மட்டும்தான்<br />
அவள் வரும்போது முத்தமிட்டும்<br />
காகித கப்பல் விட்டும் <br />
விளையாடுவது உண்டு<br />
அது …. ? இது …..?<br />
சீ …… சீ ….<br />
அப்படியொன்றும் இல்லை.<br />
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று<br />
நான் புனிதம் காக்கிறேன்.<br />
அவள் என்னை விட்டு<br />
பிரியும்போது எனக்கு<br />
உடல் நலம் சரியில்லாமல் போகிறது<br />
அவள் வருவதைப் பார்த்தால்<br />
எங்கள் வீட்டில் கதவடைத்து விடுவார்கள்<br />
ஜன்னல்கள் உட்பட.<br />
அவளைப் பற்றி கவிதை எழுத<br />
நினைப்பதுண்டு <br />
அவளே கவிதை<br />
அவளைப் பற்றி என்ன <br />
எழுதுவது....<br />
எப்போது திருமணம்?<br />
பொறுங்கள், குழந்தைகளைக் கேட்டு சொல்கிறேன்.<br />
குழந்தைகளா?<br />
இப்பொழுது அவர்கள் தான்<br />
அவளைக் காதலிக்கிறார்கள்.<br />
குழந்தைகள் காதலிக்கிறார்களா...<br />
ஆமாம் மழையை காதலிக்காத<br />
மழலை யாராவது உண்டா?<br />
இப்போது அவர்களுக்கும்<br />
புரிகிறது அவள் மென்மையானவள்<br />
அல்ல கோபப்பட்டால் கொலையும் <br />
செய்வாள் என்று....</div>
</div>
எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-3839997023670281702012-06-28T08:01:00.001-07:002017-03-03T10:14:00.856-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-26343528492347287632011-04-18T06:14:00.001-07:002017-03-03T10:14:00.843-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"></div>எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-63343948030170564952010-12-16T08:51:00.000-08:002020-07-04T09:54:25.202-07:00ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்றச்சாட்டு – சீமான் அறிக்கை.<h1 class="entry-title"> </h1><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc2pecuZLIR9knHXMhlhGt8TmLTaE8ChJT8B1sYgVAAfoGtiN-_SVPtAlHC-Va6D9ZKYTpNvGtmZhacKp89A4_wYL3IVr82OjchsMsA9T9SXIN8M1R8Y9WYSKHidzbk1-s5ZovU8BQYMk/s1600/seeman-ap29-2009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" n4="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc2pecuZLIR9knHXMhlhGt8TmLTaE8ChJT8B1sYgVAAfoGtiN-_SVPtAlHC-Va6D9ZKYTpNvGtmZhacKp89A4_wYL3IVr82OjchsMsA9T9SXIN8M1R8Y9WYSKHidzbk1-s5ZovU8BQYMk/s1600/seeman-ap29-2009.jpg" /></a></div>ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.<br />
<br />
<br />
இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரு நாடுகளிலுமே குடுமப சர்வாதிகார ஆட்சியின் கீழ் மக்கள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் சூழலோ அறிவிக்கப்படாத மிசா காலத்தைப் போன்று இருக்கிறது. கருணாநிதி குடும்பத்தின் அடக்குமுறையின் கீழ் மக்கள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது .இருபது லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வருகிற பொங்கள் கண்ணீர் பொங்கலாக இருக்குமோ என்று கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள்.<br />
<br />
இயற்கை அனர்த்தனத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களுக்கோ, உடமைகளுக்கோ உரிய இழப்பீடுகள் இன்றி விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வரலாறு காணாத விலை உயர்வு ஏழைகளை பட்டினியில் விளிம்பிற்குத் தள்ளி விட்டது. முற்றிலுமாக நிலை குலைந்து விட்ட ஒரு மக்கள் விரோத நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் சூட்டப்பட்ட மகுடம் போல ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கிறது.விலைவாசி குறித்தோ, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள், மக்கள் குறித்தோ கவலைப்படாமல் இளைஞன் பட விழாக் கொண்டாட்டத்தில் குஷியாக இருந்த கருணாநிதி பல ஆயிரக்கணக்கான கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தினம் தோறும் சி,பி.ஐ சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் பதறிப் போகிறார். இந்த ரெய்டுகளுக்கு காரணமான டில்லி காங்கிரஸ்காரர்களை கண்டிக்க வக்கற்ற கருணாநிதி அவர்களைக் குஷிப்படுத்தவும்,மக்களின் கவனத்தில் இருந்து பிரச்சனையை திசை திருப்பவும் விடுதலைப்புலிகள் ஊடுருவி தன்னையும், பிரதமரையும் கொல்ல திட்டமிட்டிருப்பதாக காவல்துறையை ஏவி அறிக்கை வெளியிடுகிறார். ஒட்டு மொத்தமாக தமிழக மக்களுக்கு திமுக மீதும் கருணாநிதி மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் நோக்கில் ஈழத் தமிழர்களின் வாழ்வை பணையம் வைத்து காங்கிரசார் தன் மீது சுமத்திய களங்கத்தை போக்க, ஏலகிரியில் இருந்து எழுதிய திரைக்கதையை இப்பொழுது காவல்துறை மூலம் வெளியிட்டுள்ளார்.<br />
<br />
விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த இவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர்.விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல.இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-51342958488407803092010-11-29T21:52:00.000-08:002020-07-04T09:52:59.846-07:00காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ஜெகன்மோகன் ரெட்டி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0IGIF7NmQh6yX7uQmx6TWbvzTL0G9yXLh-M6YSdJulOBgFRl2gx40INvfP-hJa9AnNgCPYxkIm9TXtT3wbNYtPDoRPI-SKvLAOoqGWn2kVMH8iN_E3VQItx82ZdQ8cm9e7J2T2P4qitQ/s1600/Y.S+JAGAN+MOHAN+REDDY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0IGIF7NmQh6yX7uQmx6TWbvzTL0G9yXLh-M6YSdJulOBgFRl2gx40INvfP-hJa9AnNgCPYxkIm9TXtT3wbNYtPDoRPI-SKvLAOoqGWn2kVMH8iN_E3VQItx82ZdQ8cm9e7J2T2P4qitQ/s320/Y.S+JAGAN+MOHAN+REDDY.jpg" width="192" /></a></div>ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டி (37) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.<br />
<br />
<br />
தனது எம்.பி. பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார். அவரது தாயும் ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான விஜயம்மாவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.<br />
<br />
ஜெகன் மோகனின் இந்த திடீர் முடிவால் ஆந்திரத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜெகன் மோகன் ரெட்டி விலகல் ஆந்திர அரசியல் ஒரு திருப்பமாக கருதப்படுகிறது.<br />
<br />
காங்கிரஸ் தலைமை தன்னை இழிவுபடுத்தி,அவமானப்படுத்தியதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஜெகன் தெரிவித்தார்.<br />
<br />
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.<br />
<br />
ஜெகன் மோகனின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது, தவறான வழிகாட்டுதலின் பேரில் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று மத்திய சட்ட அமைச்சரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார்.<br />
<br />
அதேநேரத்தில், ஜெகன் மோகன் விலகியதால் ஆந்திர அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ எந்த நெருக்கடியும் இல்லை. தனி மனிதரைவிட கட்சி பெரியது என்று அவர் கூறினார்.<br />
<br />
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை கட்சி மேலிடம் முதல்வராக்கும் என்று ராஜசேகர ரெட்டி குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மூத்த தலைவர் ரோசய்யா முதல்வராக்கப்பட்டார்.<br />
<br />
<br />
இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன்மோகன் தனது ஆதரவாளர்களைத் திரட்ட, கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி ஆறுதல் யாத்திரையைத் தொடங்கினார். தனது தந்தை உயிரிழந்தபோது தற்கொலை செய்து கொண்டவர்கள், அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கான யாத்திரை என்ற பெயரில் அவர் ஆந்திர முழுவதும் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். அதோடு முதல்வர் ரோசய்யாவுக்கு மறைமுகமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தனது சாட்சி பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சித்து வந்தார்.<br />
<br />
<br />
ஜெகன் மோகன் கொடுத்த நெருக்கடி, தெலங்கானா தனி மாநில போராட்டம் போன்ற காரணங்களால் முதல்வர் பதவியிலிருந்து விலக ரோசய்யாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சட்டப் பேரவைத் தலைவராக இருந்த கிரண் குமார்ரெட்டி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜெகன் மோகனின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகளில் கட்சி மேலிடம் ஈடுபட்டது. அதற்கேற்ப ராஜசேகர ரெட்டியின் சகோதரருக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது.<br />
<br />
ஏற்கெனவே தனது சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டியை முதல்வராக்கியதோடு தனது சித்தப்பா ஓய்.எஸ். விவேகானந்த ரெட்டிக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்ததால் கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி.<br />
<br />
புதிய கட்சி<br />
<br />
<br />
விரைவில் அவர் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சியை தனது தந்தையின் பெயரைக் கொண்டு "ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்' என தொடங்க உள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
<br />
<br />
சோனியா மீது புகார்<br />
<br />
<br />
<br />
சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், தனது சித்தப்பாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பது மூலம் தனது குடும்பத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். உங்களை (சோனியா) சந்திக்க நேரம் கேட்டு எனது தாய் விஜயம்மா ஒரு மாதமாக காத்திருந்த நிலையில் நடிகரும், பிரஜா ராஜ்யத் தலைவருமான சிரஞ்சீவி உங்களைச் சந்திக்க நேரம் கேட்டபோது உடனடியாக சந்தித்தீர்கள். இது எங்களை அவமானப்படுத்தியதாகும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
<br />
<br />
அரசு தப்புமா?<br />
<br />
<br />
<br />
ராஜசேகர ரெட்டி மரணமடைந்தபோது 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது 25 எம்.எல்.ஏ.க்களே ஜெகன் மோகனை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டாலே கிரண்குமார் ரெட்டி அரசு கவிழ்ந்துவிடும். ஆனால் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யத்தின் 18 உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது. <br />
<br />
நன்றி: தினமணி <br />
<span></span> <br />
எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-35014862238068505482010-11-29T02:43:00.000-08:002020-07-04T09:54:25.062-07:00ஈழ விடுதலை: திருமாவளவன் பேச்சு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh24BjN3E-ZQ47CcaShC-xHe6AhS8_gZduB12hjn1J56shipc09H0GHwDrcaWQMrrrZrI3z19eyda63C5MCK9uHLBKhKhOi2WKwuVPGDqoYiI3rPe7z48z8sM5Fv7jXlOd03rcm683Ou_w/s1600/21-thirumavalavan-200.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh24BjN3E-ZQ47CcaShC-xHe6AhS8_gZduB12hjn1J56shipc09H0GHwDrcaWQMrrrZrI3z19eyda63C5MCK9uHLBKhKhOi2WKwuVPGDqoYiI3rPe7z48z8sM5Fv7jXlOd03rcm683Ou_w/s1600/21-thirumavalavan-200.jpg" /></a></div><br />
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் "தொல்.திருமாவளவன் கவிதைகள்' என்ற நூலின் ஆங்கில மொழியாக்கம் 'Thirst' , வெளியீட்டு மையம் சார்பாக மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்த தொல். திருமாவளவன் உரைத் தொகுப்பு நூல் "ஈழ விடுதலைக்களம்', தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல் இசைவட்டு "எழுச்சித் தமிழ்' ஆகியவற்றின் வெளியீட்டு விழா, வெளியீட்டு மையம் சார்பாக, சென்னை, அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்திலுள்ள அரங்கத்தில், 26.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.<br />
<br />
<br />
பாவலர் இன்குலாப்,பாவலர் தணிகைச்செல்வன், கவிக்கோ அப்துல் ரகுமான், பாவலர் அறிவுமதி வெளியிட, இயக்குநர் அமீர், எழுத்தாளர் இரவிக்குமார், கவிஞர் இனிமை <span style="font-size: small;">நி</span>கழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு <br />
கருத்துரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் திருமாவளன் பேசும் போது<br />
தமிழினத்தை தலைநிமிரவைத்த போராளி மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாளை இன்று உலகமே கொண்டாடி மகிழ்கிறது அவரின் பிறந்தநாளை வெளிப்படியாக வெளிச்சம் போட்டு கொண்டாடுவதற்கான வாய்ப்பில்லாத ஒரு களமாக இன்றைக்கு தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. எனினும் விடுதலைச் சிறுத்தைகள் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம் மகிழ்ச்சி அடைகிறோம்.<br />
ஈழம் விடுதலைப் பெற வேண்டும் என்ற கருத்தியலை அடைக்காக்கிற வலிமையும் வாய்ப்பும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு. அக்கருத்தை சிதைந்து போகவிடாமல் பாதுகாத்து முன்னெடுத்துச்செல்கிற கடமை இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதற்கான கலப்பணிகளை விடுதலைச்சிறுத்தைகள் செய்து வருகின்றது என்றும் பேசினார்.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-40814707997068639312010-11-28T07:27:00.000-08:002020-07-04T09:54:25.097-07:00ஈழம் அடைவதே நமது பாரிய கடமை ! - சீமான் மாவீரர் தின அறிக்கை<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXW_ukelhOxwWHFhBYReKA7lWMzWpIG6R44CzH9nAzSrjNGsDqm0HbE3lyYTmhUdf7EevwVGCWUZPraHJGB3JGkjjB9SQz7vQjHRLsi3Rej8t8U9f4UO0zf3tKoaukKCTn4npxuG4fnV0/s1600/seeman04.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXW_ukelhOxwWHFhBYReKA7lWMzWpIG6R44CzH9nAzSrjNGsDqm0HbE3lyYTmhUdf7EevwVGCWUZPraHJGB3JGkjjB9SQz7vQjHRLsi3Rej8t8U9f4UO0zf3tKoaukKCTn4npxuG4fnV0/s1600/seeman04.jpg" /></a></div><b> எனக்குள் உயிராக இருக்கும் </b><b> </b> <br />
<div style="text-align: justify;"><b> என் தாய்த்தமிழ் உறவுகளே</b><b> </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> <b>நவம்பர் </b><b>27 -</b><b>மாவீரர் நாள். மனித குல வரலாற்றில் மகத்தான தியாகங்களை புரிந்து வியத்தகு சாதனைகளை செய்து வித்தாகிப்போன எமது தமிழ்த்தேச விடுதலைப் போராளிகளை நினைவு கூறும் வீரத்திருநாள்.</b><span style="font-size: 10.368px;"><b> வரலாற்றில் மூத்த தமிழ்க்குடிக்கு காலம் அளித்த கொடையான தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய பாதையில் தம்மை மனமுவந்து ஒப்படைத்துக்கொண்ட அந்த விடுதலை வேங்கைகளை நினைவு கூறும் உன்னத நாள்.</b></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> “ </b><b>தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல் </b><b> </b></div><div style="text-align: justify;"><b> பாதுகாப்பாக வாழ்வதற்கு போராடித்தான்</b><b> </b></div><div style="text-align: justify;"><b> வாழவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு</b><b> </b></div><div style="text-align: justify;"><b> தமிழ்த்தேசம் தள்ளப்பட்டிருக்கிறது. </b><b> </b></div><div style="text-align: justify;"><b> இந்த தேசிய பணியிலிருந்துஇ வரலாற்றின்</b><b> </b></div><div style="text-align: justify;"><b> அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை</b><b> </b></div><div style="text-align: justify;"><b> ஒதுங்கிக்கொள்ளமுடியாது .</b><b>”</b></div><div style="text-align: justify;"><b> - </b><b>என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கமைய களமாடி விதையான </b><b>40</b><b> ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை போற்றும் புனித நாள்.</b><b> </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் பெருவளத்தான் காவிரியில் கல்லனை எழுப்பியபோது தமிழன் பெருமை உலகை சென்றடையவில்லை. எமது முப்பாட்டன் ராசராசனும் அவனது அருமை மகன் ராசேந்திரனும் கடல்கடந்து சென்று பல தேசங்களை வென்றபோதும் தமிழனின் புகழ் உலகத்தாரால் கவனிக்கப்படவில்லை.</b><span style="font-size: 10.368px;"><b>கற்பனைக்கெட்டாத எமது மாவீரர்களின் ஈகமே </b><b>“</b><b>தமிழன் என்றோர் இனமுண்டு</b><b>” </b><b>என்பதை உலகமறியச் செய்தது.</b></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: justify;"><b> “ </b><b>உயிர் உன்னதமானது </b><b>;</b></div><div style="text-align: justify;"><b> விடுதலை உயிரை விட உன்னதமானது</b><b>”</b></div><div style="text-align: justify;"><b> -</b><b>என்றார் தேசியத்தலைவர்இ அந்த வகையில் விடுதலைக்காக உயிர்த்துறந்தவர்கள் நமது மாவீரர்கள்.</b><b></b></div><div style="text-align: justify;"><b> ஆண்ட பரம்பரை மாண்டு போவதா</b><b>?</b></div><div style="text-align: justify;"><b> ஆளப்பிறந்தவன் அடிமையாவதா</b><b>?</b></div><div style="text-align: justify;"><b> வீரத் தமிழினம் வீழ்ந்து போவதா</b><b>?</b></div><div style="text-align: justify;"><b> வீனர்க் கூட்டம் நம்மை ஆள்வதா</b><b>?</b></div><div style="text-align: justify;"><b> -</b><b>என்று நம்மில் எழும் இவ்வினாக்களுக்கு விடையாகத்தான் நம் மாவீரர்கள் உயிரைக் கொடையாக கொடுத்து போராடினார்கள்.</b><b></b></div><div style="text-align: justify;"><b> நாம்</b><b></b></div><div style="text-align: justify;"><b> சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே </b><b></b></div><div style="text-align: justify;"><b> அவர்கள் </b><b></b></div><div style="text-align: justify;"><b> சுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டார்கள்.</b><b></b></div><div style="text-align: justify;"><b> அன்னைத் தமிழீழம் அன்னிய சிங்களனிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நமது வீரவேங்கைகள் உயிர் நீத்தார்கள்.</b><b></b></div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: justify;"><b> “</b><b>அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானது</b><b>” </b></div><div style="text-align: justify;"><b> -</b><b>என்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்பவே அவர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> ஈழ விடுதலை என்பது ஈழத்தில் வாழ்கிற இ வாழ்ந்த இ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கான விடுதலை மட்டுமல்ல இ அது உலகெங்கும் பரவி வாழ்கின்ற </b><b>12</b><b> கோடி தமிழ்த் தேசிய இன மக்களுக்குமான தேச விடுதலை. ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> தமிழீழ விடுதலை என்பது தலைவர் பிரபாகரன் அவர்களின் சொந்த இலட்சியமோ தனிப்பட்ட விருப்பமோ அல்ல இ ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இன மக்களின் ஆன்ம விருப்பத்தின் வெளிப்பாடே தனித்தமிழீழ அரசுஇ தமிழ்த் தேசிய மக்களின் அந்த ஆன்ம விருப்பத்தை நிறைவேற்றவே நமது தேசியத் தலைவர் அவர்கள் </b><b>“</b><b>விடுதலைப்புலிகள்</b><b>” </b><b>என்ற தமிழீழ தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடினார்.</b><b></b></div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: justify;"><b> எமது மக்களின் இந்த விருப்பத்தினை புரிந்துகொள்ளாத சர்வதேச சமூகம் சிங்கள பேரினவாத அரசின் பொய்யான பரப்புரையினை நம்பி நமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென சித்தரித்து சிங்கள பேரினவாத அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> தற்பொழுது தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுத் தேக்கமொன்றில் வந்து நிற்கிறது. இனத்தின் விடியலுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் யுத்தகளத்தில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும். இந்த பின்னடைவுக்கான புறக்காரணங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானவையாக சிங்கள அரசின் இனவாதத்திற்கு இந்திய சீன ஏகாதிபத்தியங்களின் உதவி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுஇ ஐ.நா.சபையின் பொறுப்பற்ற தன்மை ஆகியவையாகும். அதிலும் குறிப்பாக விடுதலைப் போராட்டம் இன்று வந்தடைந்திருக்கும் தேக்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் பின்னணியில் இருந்து பெருமளவு இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> நார்வே அரசை நடுநிலையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதேஇ பெருமளவிலான நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடைவிதித்துஇ புலிகளின் பலத்தைப் பெருமளவு குறைத்தன. ஐ.நா.சபையோ இலட்சக்கணக்காகன மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகள்இ பாஸ்பரஸ் குண்டுகள்இ பொழிந்து தாக்கப்பட்டபோது அகதிகளாய் தமது வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்பட்</b><b>;</b><b>ட போது அங்கங்கள் சிதறி ஊனமடைந்து துடித்தபோது பசியில் சிறுகச் சிறுகச் செத்து மடிந்தபோது வெறுமென அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாமல் </b><b>‘</b><b>போர் முடிந்தது.</b><b>’ </b><b>என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தபோது மட்டும் பொது வெளிக்கு வருகிறது. </b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> தொடர்ச்சியான </b><b>30</b><b> வருடப் போரின் இறுதியில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னர் பல்லாயிரம் போராளிகளின் உயிரிழப்புக்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு போரின் கொடுமைகளைக் கண்ணால் பார்த்து மனம் பேதலித்து சில இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியிருக்கும் ஒரு மண்ணில் அவர்களுக்கான நியாயம் எப்படி யாரால் வழங்கப்படப் போகிறது </b><b>? </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> “ </b><b>எமது தேச விடுதலை என்பது எதிரியால் </b><b></b></div><div style="text-align: justify;"><b> வழங்கப்படும் சலுகையல்லஇ அது ரத்தம்</b><b></b></div><div style="text-align: justify;"><b> சிந்தி உயிர் விலை கொடுத்து போராடிப்</b><b></b></div><div style="text-align: justify;"><b> பெறவேண்டிய புனித உரிமை</b><b>”</b></div><div style="text-align: justify;"><b> -</b><b>என்ற நமது தேசியத்தலைவர் அவர்களின் கூற்றுக்கமைய எண்ணற்ற உயிர் விலையினை கொடுத்தே உலகின் மனசாட்சியை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் நிலை இன்று எழுந்துள்ளது.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> உலகம் முழுவதும் பரவலாக வாழும் தமிழர்கள் இன்று வீதிக்கு வந்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள.</b><b>; </b><b>இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையாக அறியப்பட்டு வந்த தமிழர்களின் பிரச்சனை இன்று சர்வதேசம் முழுவதும் பேசப்படும் பெருளாக மாறி இருக்கிறது. போராட்டங்கள் வேறு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவிலும் இது நமக்கு சாதகமான விசயமாகும். வன்னிக்காட்டில் நடந்த யுத்தம் இன்று உலகின் வீதிகளில் எதிரொலிக்கிறது. </b><b></b></div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: justify;"><b> “</b><b>போராட்ட வடிவங்கள் மாறலாம் </b><b>;</b></div><div style="text-align: justify;"><b> போராட்ட இலட்சியங்கள் மாறுவதில்லை</b><b>”</b></div><div style="text-align: justify;"><b> - </b><b>என்ற நமது தேசியத்தலைவர் அவர்களின் கூற்றுக்கமையவும்.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> “ </b><b>யுத்தம் என்பது இரத்தம் சிந்துகிற அரசியல் </b><b>;</b></div><div style="text-align: justify;"><b> அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்</b><b>”</b></div><div style="text-align: justify;"><b> -</b><b>என்ற புரட்சியாளர் மாவோ அவர்கள் சொன்னதைப் போலவும் நாம் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தத்திற்க்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> 1½ </b><b>கோடி சிங்களனிடம் </b><b>12</b><b> கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான்.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> இந்த நிலையிலிருந்து விடுதலையடையாமல் இனத்தின் விடுதலை சாத்தியமில்லை. </b><b>“</b><b>நாம் தமிழர்</b><b>” </b><b>என்ற உணர்வை பெற்று பேரினமாக ஒன்றிணையாத வரை நம் விடுதலையை வென்றெடுக்க வாய்ப்பில்லை. </b><b></b></div><div style="text-align: justify;"><b> “ </b><b>தமிழர் ஒன்றானால்</b><b></b></div><div style="text-align: justify;"><b> வாழ்வு பொன்னாகும்</b><b></b></div><div style="text-align: justify;"><b> இல்லையேல் </b><b></b></div><div style="text-align: justify;"><b> மண்ணாகும்.</b><b>”</b></div><div style="text-align: justify;"><b> -</b><b>என்பதனை இந்த நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியவன் நான் பெரியவன் என்ற வேறுபாட்டை களைந்து இனம் பெரிதுஇ இனத்தின் மானம் பெரிது என்ற எண்ணம் வளர வேண்டும் .</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> இன்றைக்கு இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு இ போர்க் குற்றம் புரிந்த நாடு என்ற உண்மையை பல்வேறு நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவால் ஐ.நா.அவை இலங்கை போர்க்குற்றம் குறித்த ஒரு விசாரணை குழுவை நியமித்திருக்கிறது. நாம் நம்மை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ராசபட்சேவுக்கு தண்டணை வாங்கித்தர வேண்டும் என்ற உறுதி ஏற்கவேண்டும். இதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான சர்வதேச ஆதரவு சக்திகளை திரட்ட வேண்டும். எம் தமிழின மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு இந்தியாவில் துணை நின்ற சக்திகளை விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த அணிவகுப்போம் என்ற சபதம் ஏற்க வேண்டும்.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க போராடவேண்டும். புலிகள் மீதான தடை என்பது தமிழ்த் தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு அவமானமாகும். இந்த தடையால் வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகிற எமது மக்களை ஏதிலிகளாக ஏற்க மறுக்கிற ஒரு நிலை நீடிக்கிறது. எனவே தடையை நீக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.</b><b></b></div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: justify;"><b> உன்னதமான இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த நம் மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய நாளில் நாம் ஏற்றுகிற ஈகச்சுடர் மீது சத்தியம் செய்து உறுதி ஏற்க வேண்டும். இதுவே அளப்பரிய அர்ப்பணிப்பு செய்த அந்த தியாக சீலர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக அமையும்.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> நமது தேசியத் தலைவர் கூறியது போல </b><b></b></div><div style="text-align: justify;"><b> “ </b><b>சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால் </b><b></b></div><div style="text-align: justify;"><b> சாதாரணமானவனும் சரித்திரம் படைக்க முடியும்.</b><b>”</b></div><div style="text-align: justify;"><b> அவ்வாறு சாகத்துணிந்து சரித்திரமானவர்கள் நம் மாவீரர்கள் .</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> எங்கள் மாவீரர்களே !</b><b></b></div><div style="text-align: justify;"><b> உங்கள் இரத்தத்தால் நமது தமிழினத்தின் விடுதலை </b><b></b></div><div style="text-align: justify;"><b> வரலாறு மகத்துவம் பெறுகிறது.</b><b></b></div><div style="text-align: justify;"><b> உங்கள் இலட்சிய நெருப்பில் தமிழினப் போராட்டம்</b><b></b></div><div style="text-align: justify;"><b> புனிதம் பெறுகிறது.</b><b></b></div><div style="text-align: justify;"><b> அளப்பரிய உங்கள் தியாகத்தால் தமிழ்த்தேசியம் </b><b></b></div><div style="text-align: justify;"><b> உருவாக்கம் பெறுகிறது</b><b></b></div><div style="text-align: justify;"><b> உங்கள் நினைவுகளை போற்றுவதால் எங்கள்</b><b></b></div><div style="text-align: justify;"><b> உறுதி மேலும் மேலும் உறுதியாகிறது.</b><b></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> தாயகக் கனவுடன் </b><b></b></div><div style="text-align: justify;"><b> சாவினைத் தழுவிய</b><b></b></div><div style="text-align: justify;"><b> சந்தனப் பேழைகளே !</b><b></b></div><div style="text-align: justify;"><b> எம் விடுதலைக்கான </b><b></b></div><div style="text-align: justify;"><b> வீர விதைகளாக </b><b></b></div><div style="text-align: justify;"><b> விழுந்த மாவீரர்களே !</b><b></b></div><div style="text-align: justify;"><b> எந்த இலட்சியத்தை எம்மிடம் கையளித்து சென்றீர்களோ அதனை நிறைவேற்றும் வரை உறுதியாக நின்று இறுதிவரை போராடுவோம் என்ற உறுதியோடு எங்களின் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் .</b><b></b></div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: justify;"><b> வீரவணக்கம் ! வீரவணக்கம் !!</b><b></b></div><div style="text-align: justify;"><b> எங்கள் மாவீரர்களே வீரவணக்கம் !</b><b></b></div><div style="text-align: justify;"><b> நீங்கள் சிந்திய குருதி</b><b></b></div><div style="text-align: justify;"><b> ஈழம் மீட்பது உறுதி ! </b><br />
<br />
<b> </b><b> நன்றி: நாம் தமிழர் இயக்கம் வலைத்தளம் </b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b> </b></div><div style="text-align: right;"><b> சீமான்</b><b></b></div><div style="text-align: right;"><b> தேசியப் பாதுகாப்பு கைதி</b><b></b></div><div style="text-align: right;"><b> நடுவண் சிறை </b></div><b> வேலூர்.</b>எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-60132877432298854332010-11-28T02:37:00.000-08:002020-07-04T09:54:25.167-07:00உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் அமையும்:வைகோ<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpgRjth3kzlJxOO2pfuBUZYiCU3P1dX8EMQp6UDH1ysaGsJ-xRIEgcGDLF-6xw0oaqD9lSZbjY9toPCspCwzwi_nkQs2sJ470JMI2foO_3luTLWOK0hn-FbsspM5HhTDMoZbUc3ItliyU/s1600/vaiko.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpgRjth3kzlJxOO2pfuBUZYiCU3P1dX8EMQp6UDH1ysaGsJ-xRIEgcGDLF-6xw0oaqD9lSZbjY9toPCspCwzwi_nkQs2sJ470JMI2foO_3luTLWOK0hn-FbsspM5HhTDMoZbUc3ItliyU/s1600/vaiko.jpg" /></a></div>சென்னை தியாகராய நகரில் 27-11-2010-இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.<br />
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது.<br />
<br />
அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.<br />
<br />
பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது.<br />
<br />
முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.<br />
<br />
ஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகா முக்குதான் மக்களை மாற்றுகின்றனர்.<br />
<br />
தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?<br />
<br />
ஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன்.<br />
<br />
தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.<br />
<br />
காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.<br />
<br />
பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-89357524268062895652010-10-30T09:48:00.001-07:002020-07-04T09:54:25.305-07:00விடுதலைப்புலிகளை எக்காலத்திலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் வாதிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.<br />
<br />
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய போதிய காரணங்கள் உள்ளனவா? தடையை விலக்கிக் கொள்ளலாமா? என்பதை விசாரிக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது. விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.<br />
<br />
அரசு தரப்பின் சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிரிவு ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகமது அஷ்ரப் மற்றும் திண்டுக்கல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.<br />
<br />
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?<br />
<br />
நீதிபதி விக்ரம்ஜித் சென், "விடுதலைப்புலிகள் அமைப்பு இருக்கிறதா அழிக்கப்பட்டு விட்டதா?'' என்று கேட்டார்.<br />
<br />
இதற்கு பதிலளித்த வைகோ, "விடுதலைப் புலிகளை எக்காலத்திலும் முற்றிலுமாக அழித்துவிட முடியாது. அவர்கள் லட்சியத்தை வெல்வார்கள்'' என்று கூறினார். இதே கருத்தை பழ. நெடுமாறனும், வழக்கறிஞர் சந்திரசேகரனும் வலியுறுத்தினார்.<br />
<br />
தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன், நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.<br />
<br />
அப்போது வைகோ எழுந்து, "அக் கூட்டத்தில் சீமான் இலங்கையில் தமிழர்கள் சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைக் கண்டிக்கிறேன் என்று பேசியது சாட்சிக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். சாட்சி, "தெரியும்!'' என்று சொன்னார். அதேபோன்ற கருத்தை மற்றொரு பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதனால் கைது செய்யப்பட்டு தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியுமா?" என்று கேட்டார். சாட்சியோ தனக்குத் தெரியாது என்று சொன்னார்.<br />
<br />
முன்னதாக, தீர்ப்பாய கூட்டத்திற்கு வந்திருந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மட்டுமே முறையிடலாம். அவர்கள் சார்பில் வைகோவும், பழ.நெடுமாறனும் ஆஜராக அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் வாதிட்டார்.<br />
<br />
டெல்லியில் நவ 1-ல் விசாரணை:<br />
<br />
அதற்கு நீதிபதி விக்ரம் ஜித், "அவர்களை ஆஜராக அனுமதிக்கவில்லை, கருத்து சொல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வேண்டுமானாலும் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்'' என்றார். உடனே சுப்பிரமணிய சாமி, "மத்திய மந்திரி ஆ.ராசா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி செல்ல வேண்டியுள்ளது. எனது கருத்துகளை மனுவாக சமர்ப்பிக்கிறேன்," என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.<br />
<br />
தீர்ப்பாயத்தின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நடக்கிறது.<br />
<br />
நிச்சயம் தடை அகலும்! - வைகோ<br />
<br />
விசாரணை முடிந்து வெளியில் வந்த வைகோ, "நிச்சயம் புலிகள் மீதான தடை அகலும் நம்புகிறேன். புலிகளுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் இப்போது யாராலும் கூற முடியாது. எனவே தடை நீங்கும். இந்தியா வரும் ஈழத் தமிழரின் இன்னலும் நீங்கும்," என்றார்.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-86144721126763420892010-10-30T09:37:00.000-07:002020-07-04T09:54:25.271-07:00சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கைவரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். <br />
படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள். <br />
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.<br />
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு. <br />
யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள். <br />
தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது. <br />
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.<br />
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது. சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.<br />
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம். <br />
நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-66952271735793495322010-10-22T08:41:00.001-07:002020-07-04T09:54:25.236-07:00சீறும் பாடலாசிரியர் தாமரை<b style="color: black;">"ஈழப் பிரச்னைக்காகப் போராடியவர்களில் ஒருவர் நீங்கள். மே 18-க்குப் பிறகு, 'இந்த எல்லாப் போராட்டங்களும் வீண்' என்ற அயர்ச்சி ஏற்பட்டதா?"</b><br />
"போரோடு முடிந்து விடவில்லையே ஈழத்துக் கொடுமைகள். முள்வேலி முகாம் கொடுமைகள், சரண் அடைந்தவர்கள் சித்ரவதை, பாலியல் வதை, கொடூரக் கொலைகள், தமிழர் நிலம் சிங்களமயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே. புண் பட்டுக்கிடந்தால் வேலைக்கு ஆகாது என்று துள்ளி எழுந்து, இலங்கைப் புறக்கணிப்பு, போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஈழம்... என் நெஞ்சில் ஆறாத, மாறாத காயம்!"<br />
<b style="color: black;">"இன்றைய இந்திய காங்கிரஸ் அரசின் போக்கு குறித்து?"</b> <br />
"இந்திய காங்கிரஸ் அரசு யாருக்காக எப்படி எல்லாம் செயல்படுகிறது, எப்படிப் பெருங் குழுமங்களுக்கு ஏவல் செய்கிறது என்பதை அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார்கள். நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது தமிழினத் தைக் கருவறுக்கப் புறப்பட்ட அரசு. தமிழி னம் வாழ வேண்டும் எனில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை அடியோடு ஒழித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் வரையில்தான், இரு பெரும் கழகங்களும் மாறி மாறி அதைத் தோளில் சுமக்கவும், அதற்காகத் தமிழனைக் காட்டிக்கொடுக்கவும் போட்டியிடும். தமிழர் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் இவற்றை முன்னிறுத்தினால் மட்டுமே, தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவிப்பது நம் கையில் உள்ளது. அதற்கு முதல் வேலை, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதுதான். நல்ல வாய்ப்பாக சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெல்லக் கூடாது என்பதை மனதில்கொள்வோம்!" <br />
<b style="color: black;">"ஈழப் பிரச்னையில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன?" </b><br />
"ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரஸின் குருதிக் கறை படிந்த கையை இறுகப் பற்றி, அதை இழந்துவிடக் கூடாதெனத் துடிப்பவர் கருணாநிதி. அந்தக் கையை எப்படியாவது கைப்பற்றத் துடிப்பவர் ஜெயலலிதா. 'ஆமாண்டா, அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சதைப் பாரு' என்று தெனாவெட்டாகக் காட்டிக்கொடுப் பார் ஒருவர். 'ஐயகோ, என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே!' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு? சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான்!" <br />
<b style="color: black;">"'ஈழப் போராட்டத்தின் தோல்வி (அ) பின்னடை வுக்கு எது அல்லது, யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?"</b> <br />
"சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றா மல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!" எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-4088668273322781142010-10-05T04:05:00.000-07:002020-07-04T09:54:25.132-07:00சமீபத்தில் கேட்ட ஈழத்து மாணவனின் குரல்எம் தேசம் தமிழ் ஈழம் ஈழத்தமிழராகிய எங்களின் தாய் தேசம். தமிழர் நாம் சீரும் சிறப்போடும் வாழ்ந்த தேசம். பல கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் புலவர்கள் வாழ்ந்த மண். வீரம் செறிந்த அரசர்களான சங்கிலியன் பண்டாரவன்னியன் போன்றோர் வாழ்ந்தமன். இலங்கையின் வடக்கிலு...ம் கிழக்கிலும் தமிழ் மன்னர்கள் ஆட்சிசெய்கையில் தெற்கில் சிங்களவர்கள் குடியேறினர். பல நூறு ஆண்டுகளாய் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இறுதியாக பிரித்தானியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிரித்தானியர்கள் தங்களின் ஆட்சிமுறையை சுலபமாக்க தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வடக்கு கிழக்கையும் (தமிழீழம்) சிங்களவர்கள் வாழ்ந்த தெற்கு மேற்கையும் ஒன்றாக இணைத்து ஸ்ரீலங்கா எனப் பெயரிட்டு ஒருநாடாக ஆட்சி செய்தனர் . பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்தது. பிரித்தானியர் இலங்கையை விட்டு செல்கையில் சிங்களவர்களிடம் ஆட்சியை விட்டுச்சென்றனர். அன்று முதல் சிங்களவர் தமிழர் மீதான அடக்குமுறையை மெல்லமெல்ல கட்டவிழ்த்தனர். தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது அகிம்சைப்போராட்டங்கள் சிங்கள காடையர்களால்வன்முறையின்மூலம் அடக்கப்பட்டது. சிங்களவனுக்கு அகிம்சை புரியாது என்பதை சிலவருடங்களின்பின்பே தமிழர் புரிந்துகொண்டனர். அடக்குமுறையை அடக்குமுறையின்மூலமேஎதிர்கொள்ளமுடியும் என ஆயுதப்போராட்டத்தை துடிப்பும் தமிழ்ப்பற்றும் கொண்ட இளம்தலைமுறை ஆரம்பித்தது. ஆயுதப்போராட்டம் பலபோராளிகுழுக்கழாக பல்வேறு பெயர்களில் பல்வேறு கொள்கைகளுடன் இயங்கியது. பலர் பின்பு தமிழர் உரிமைக்கான தமது போராட்டக் கொள்கையில் இருந்து விடுபட்டு. தமிழ் மக்களுக்கே தீங்கிலைத்தனர், இந்தியா பல போராளிக்குழுக்களுக்கு பயிற்ச்சியளித்தது அவர்களை தமது கட்டுப்பாட்டில் தமது நலனுக்காக பயன்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவின் கபடத்தனத்தை புரிந்து அவர்களின் பிடியில் இருந்து விலகினர். இதைப் பொறுக்காத இந்தியா உளவுப்பிரிவான ரோ மற்றைய போரளிக்குளுக்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. பல போராட்டக் குழுக்கள் ஒட்டுக்குழுக்களாக மாறியது. ஸ்ரீலங்கா இனவாத சிங்களராணுவத்தையும் இரக்கமற்ற இந்தியராணுவத்தையும் துரோகிகளான ஒட்டுக்குளுக்களையும் தாண்டி. எமது விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் எமது தமிழீழ தாயகத்தின் பல பகுதியிலிருந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து பல நூறு ஆண்டுகளின் பின். தமிழீழ மண்ணிலே தமிழர் தம்மை தமிழரே ஆண்ட சரித்திரம் படைத்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்மக்கள் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தனர். தமிழீழ மக்களுக்காக தமிழர் தாயகத்தில் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழீழ விவசாய பொருண்மியம், தமிழீழ மீன்வளத்துறை, சுய தொழில் ஊக்குவிப்புத்திட்டம், கால்நடை வளர்ப்புத்திட்டம் போன்றவை தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டங்களுக்கு மக்கள் முதலீடு செய்வதற்க்கு தமிழீழ மக்கள் வங்கி கடனுதவி செய்தது. மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக தமிழீழ போக்குவரத்து திணைக்களம் அமைக்கப்பட்டது. தாயகத்தில் மிகமிக குறைந்த அளவில் அரிதாக சிறு சிறு குற்ற செயல்கள் இடம்பெற்றது. அதனைத்தடுக்க தமிழீழ காவல்த்துறை நியமிக்கப்பட்டது. பிற்காலத்தில் காவல்த்துறை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து பிரிவு, சுங்கவியல் பிரிவு, குற்றப்பிரிவு, விசாரனைப்பிரிவுகளாக பல பரிமாற்றம் கண்டது. தமிழீழ நீதிமன்றில் சர்வதேச சட்டங்களுக்கு நிகரான சட்டங்கள் வகுக்கப்பட்டு தமிழீழத்தில் நீதி நிலைநாட்டப் பட்டது. தமிழீழ சட்டத்தை கற்ப்பிக்க தமிழீழச் சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது. இதில் பலர் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்து சட்டவல்லுனர்களாக சிறந்துவிளங்கினர் தமிழீழ மாணவர்களின் கல்விக்கு தமிழீழ கல்வித்திணைக்களம் பல உதவிகளைசெய்தது. தமிழீழத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழீழ வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு பணம் வைப்பிலிடப்பட்டதுதமிழீழ மக்களின் வாழ்க்கை போர்ச்சூழ்நிலையிலும் நின்மதியாக இருந்தது. அவர்கள் பொழுதைக்கழிக்க பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மாவீரர்நாள், கரும்புலிகள்நாள் மக்களால் ஒற்றுமையுடனும் எழுச்சியுடனும் நினைவுகூரப்பட்டது. அத்துடன் கேணல் கிட்டு, தியாகி திலீபன், அன்னை பூரணி, இரண்டாம் லெப்டினன்ட் மாலதி போன்ற பல போராளிகளினதும் தியாகிகளினதும் நினைவுதினங்கள் மக்களால் நினைவுகூரப்பட்டது. தமிழீழ மக்கள் சுதந்திரிமாக வாழ்ந்தாலும் அவர்கள் நித்தம் எதிரியின் போரை எதிர்கொண்டனர், இருப்பினும் நின்மதியாகவே வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சொந்த தாய்மடியாம் தமிழீழத் தாய் நாட்டில். அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசித்தனர். அவர்களை அவர்களே ஆண்டனர். அவர்களை அடக்கி ஆழ எவரும் இல்லை. தமிழர் அனைவரும் பல வருடங்களுக்குப்பிறகு தமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ்ந்தனர். அந்த தேசம் இன்று உலகவல்லாதிக்க நாடுகளின் துணையோடு இனவாத சிங்களத்தால் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர் நாம் ஒன்றாய் இணைந்து மீட்டெடுப்போம் எம் தாயகத்தை. எம் மக்கள் மீண்டும் சுதந்திரமாய் நிமிர்ந்துவாழ வழி செய்வோம். தமிழர் நாம் மீண்டும் எமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ, வேண்டும் எம் தமிழீழ தேசம்.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-15719715768909447542009-10-11T07:41:00.000-07:002020-07-04T09:54:24.957-07:00வதை முகாம்களுக்கு அனுமதி மறுப்புஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்ல முடிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.<br />
<b><br />
</b><br />
புதினம்.காம் வெளியிட்ட செய்தி<br />
<b><br />
</b><br />
இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கி இருக்கும் வன்னி வதை முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் அதேநேரம், இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கின்றது கொழும்பு வார ஏடான 'சண்டே ரைம்ஸ்'.<br />
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்துப் பேசியபோது முகாம்களுக்கு செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.<br />
<br />
கோரிக்கை விடுத்து ஒரு மாதமாகி விட்ட நிலையிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. "முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி குறித்த எமது கோரிக்கைக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை" என்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.<br />
<br />
இதேபோன்றே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதை அரசு ஏன் தடுக்கிறது என்பது தொடர்பில் விளக்கம் தருமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.<br />
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. எதிர்வரும் 27 ஆம் நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.<br />
இவ்வாறு இந்திய நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகையில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அங்கு செல்ல அனுமதிக்கப்படாமை அவர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-20706397711230654562009-09-25T02:56:00.000-07:002020-07-04T09:54:25.026-07:00நாளை வருவன் ஒரு மனிதன்<div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFSYkhX4lfvm44mhnrupDJF6-Kd2gIu63GleDX0sY7JqIIa0dmbRbYEVQEa4hD4GCRUvmzZw-nTsGAZcUgU1IoKH09w6tZ12XDbKkv6konPZkaAkI-3Mu4quxrhMNr94dxiyuRK613Wps/s1600-h/Fire_Eye%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span class="Apple-style-span" style="font-size: x-large;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFSYkhX4lfvm44mhnrupDJF6-Kd2gIu63GleDX0sY7JqIIa0dmbRbYEVQEa4hD4GCRUvmzZw-nTsGAZcUgU1IoKH09w6tZ12XDbKkv6konPZkaAkI-3Mu4quxrhMNr94dxiyuRK613Wps/s200/Fire_Eye%5B1%5D.jpg" /></span></a><br />
</div><span class="Apple-style-span" style="font-size: x-large;"><br />
</span><b><span style="color: red;"><span class="Apple-style-span" style="font-size: x-large;">புரட்சிக்கமால், மட்டக்களப்பு</span></span><br />
</b><br />
நாளை வருவன் ஒரு மனிதன்;<br />
<span style="font-family: aAvarangal, TAU_1_ELANGO_Barathi, Latha, TSCu_InaiMathi, TSCu_ArulMathi, TSCu_InaiKathir, InaiKathir_Unicode, Code2000, TSC_Avarangal, TabAvarangal2, Latha, InaiMathi_Unicode, InaiKathir_Unicode, 'Arial Unicode MS'; line-height: normal; white-space: pre-wrap;">ஞாலத்</span> திசைகள் கோலமிட<br />
நாளை வருவன் ஒரு மனிதன்.<br />
<br />
உள்ளத் தெளிவின் நிலவினிலே<br />
ஒளிரும் நினைவாம் சுடரினிலே...<br />
வெள்ளப் புனலின் கலப்பினிலே<br />
விடியற் பரிதி உருவினிலே<br />
நாளை வருவன் ஒரு மனிதன்!<br />
<br />
காலச் சுழலின் சுழிதனிலே<br />
கலந்து சுழலும் மேதையரின்<br />
கோலக் கனவின் கருக்குழியில்<br />
கோடி காலம் குடியிருந்தான் ...<br />
நாளை வருவன் ஒரு மனிதன் !<br />
<br />
மாநிலத்துக் கழனியினை<br />
மாற்றி யுழக்கி வரப்பிட்டு<br />
ஏணி பெற்ற வாழ்க்கையினை<br />
எரிவிட்டாக்கும் நல்லுழவன் ...<br />
நாளை வருவன் ஒரு மனிதன்!<br />
<br />
சாதி ஒன்றாய் <span style="font-family: aAvarangal, TAU_1_ELANGO_Barathi, Latha, TSCu_InaiMathi, TSCu_ArulMathi, TSCu_InaiKathir, InaiKathir_Unicode, Code2000, TSC_Avarangal, TabAvarangal2, Latha, InaiMathi_Unicode, InaiKathir_Unicode, 'Arial Unicode MS'; font-size: 14px; white-space: pre-wrap;">நிறமொன்றாய் </span><br />
சமயம் ஒன்றாய் <span style="font-family: aAvarangal, TAU_1_ELANGO_Barathi, Latha, TSCu_InaiMathi, TSCu_ArulMathi, TSCu_InaiKathir, InaiKathir_Unicode, Code2000, TSC_Avarangal, TabAvarangal2, Latha, InaiMathi_Unicode, InaiKathir_Unicode, 'Arial Unicode MS'; font-size: 14px; white-space: pre-wrap;">மொழியொன்றாய் </span><br />
நீதி ஒன்றாய் <span style="font-family: aAvarangal, TAU_1_ELANGO_Barathi, Latha, TSCu_InaiMathi, TSCu_ArulMathi, TSCu_InaiKathir, InaiKathir_Unicode, Code2000, TSC_Avarangal, TabAvarangal2, Latha, InaiMathi_Unicode, InaiKathir_Unicode, 'Arial Unicode MS'; font-size: 14px; white-space: pre-wrap;">நிலையொன்றாய்</span><br />
நிரைகண் டாளும் <span style="font-family: aAvarangal, TAU_1_ELANGO_Barathi, Latha, TSCu_InaiMathi, TSCu_ArulMathi, TSCu_InaiKathir, InaiKathir_Unicode, Code2000, TSC_Avarangal, TabAvarangal2, Latha, InaiMathi_Unicode, InaiKathir_Unicode, 'Arial Unicode MS'; font-size: 14px; white-space: pre-wrap;">விஞ்ஞானி </span><br />
நாளை வருவன் ஒரு மனிதன்!<br />
<br />
<span style="font-family: aAvarangal, TAU_1_ELANGO_Barathi, Latha, TSCu_InaiMathi, TSCu_ArulMathi, TSCu_InaiKathir, InaiKathir_Unicode, Code2000, TSC_Avarangal, TabAvarangal2, Latha, InaiMathi_Unicode, InaiKathir_Unicode, 'Arial Unicode MS'; font-size: 14px; white-space: pre-wrap;">வானக் கூரைப் </span>பந்தலின் கீழ்<br />
வையகத்துப் பெருமனையில்<br />
மானிடத்தின் பிள்ளைகளை<br />
மருவி மகவாய் விருந்தோம்ப...<br />
நாளை வருவன் ஒரு மனிதன்!எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-6422471994458259882009-09-23T08:50:00.000-07:002020-07-04T10:00:41.715-07:00எஸ்.எம்.எஸ். கவிதைகள்<span style="font-family: 'Trebuchet MS'; line-height: 20px;"><span style="font-size: small;"><b>நான் மூடன் அல்ல<br />
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.<br />
கிளியின் ஒரு நிமிட<br />
விடுதலைக்காக!<br />
<br />
கவிதைகளை வா</b></span> <span style="font-size: small;"><b>சிப்பது மட்டுமல்ல<br />
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்<br />
நான் நேசிக்கும் அழகான</b></span><span style="font-size: small;"><b><br />
கவிதை நீ!<br />
<br />
</b></span> <span style="font-size: small;"><b>உன்னைவிட்டு பிரியும்போது-நான்<br />
தனியே பேசிக்கொள்கிறேன்.<br />
என் நிழலுடன் அல்ல-உன்<br />
நினைவுகளுடன்.</b></span><span style="font-size: small;"><b><br />
<br />
உன்னை கண்ட நாள் முதல்<br />
நட்பு கொண்டேன்-பின்பு<br />
காதல் கொண்டேன்!<br />
நட்பு உன் மீது-காதல்<br />
நம் நட்பு மீது. </b></span> </span>எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-26292625759577588382009-09-23T08:39:00.000-07:002009-09-23T08:39:33.537-07:00இது புது மொழிமலை மீது ஏறிநின்றால் மலைகூட நம் காலுக்கு கீழ்தான்எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-23717434282760293192009-09-23T08:32:00.000-07:002009-09-23T08:32:51.828-07:00புத்தர்கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனைஎஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-53861701803591182422009-09-20T00:44:00.001-07:002017-03-03T10:14:00.870-08:00எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-76332229802713840712009-07-04T08:10:00.000-07:002017-03-03T10:14:00.898-08:00பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? சிங்கள ராணுவத்தால் காட்டப்பட்ட உடல் பிரபாகரனனுடையது தானா? என ஏற்கனவே நிறையபேர் எழுதிவிட்டார்கள். அலசிவிட்டார்கள். இருந்தபோதிலும் என் பங்குக்கு இதை பற்றி எழுதியாக வேண்டுமென, என் உள்மனம் உந்துதலினால் இதை எழுதுகிறேன்.
<br />
<br />கொரில்லா தலைவர்களின் மரணங்கள் எப்போதுமே சர்ச்சைகளை கொண்டவை. அவர்கள் பூத உடலை காட்டினாலும் அவரது விசுவாசிகள் நம்புவதென்பது முடியாத காரியம். அதற்கு காரணம் அந்த தலைவர்களின் மீது வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும்தான்.
<br />பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் வன்னிப் போரின் கடைசி தினங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
<br />
<br />போரின்போது சிங்கள அரசு இரண்டு போர்நிறுத்தத்தை அறிவித்தது. ஒன்று பிப்ரவரி 1லி ருந்து 3ஆம் தேதி வரையிலான மூன்று நாள் போர் நிறுத்தம். மற்றொன்று ஏப்ரல் 3ஆம் தேதியும், 14ஆம் தேதியுமாக இரண்டு நாள் போர்நிறுத்தம். இரண்டு போர் நிறுத்தத்திற்கான நோக்கமானது பாதுகாப்பு வளையத்திலிருந்து பேருக்குதான் அது பாதுகாப்பு வளையம். ஆனால் உண்மையிலேயே அது தான் போர் வளையம். பொதுமக்களை வெளியே கொண்டு வருவதற்காகதான் என கூறப்பட்டாலும், போர்நிறுத்தத்தின் போது தொடர்ந்து ராணுவம் தாக்குதலை நடத்திதான் வந்தது. பிப்ரவரி போர்நிறுத்தத்தில் படைகளை
<br />ஒழுங்குபடுத்துவதற்கும், ஏப்ரல் போர்நிறுத்தத்தில், ராணுவத்திற்கான பதுங்குக் குழிகள் வெட்டவும், படை பிரிவை மாற்றுவதற்கும் பயன்படுத்திக் கொண்டது.
<br />பிரிகேடியர் பிரசன்ன டிசில்வா 55ஆவது டிவிஷன் படையிலிருந்து 59ஆவது டிவிஷனுக்கு மாற்றி கொண்டார். இந்த டிவிஷன் பாதுகாப்பு வளையத்தின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி முன்னேறுமாறு நிறுத்தப்பட்டது. 58ஆவது டிவிஷனுக்கு பிரிகேடியர் சவிந்திர சில்வா தலைமையேற்றார். இது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி முன்னேறுமாறு நிறுத்தப்பட்டது. 53ஆவது டிவிஷனுக்கு கமாண்டர் ஜெனரல் கமல் குணரத்தினே தலைமையேற்றார். இந்த டிவிஷன் படைப்பிரிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னேறியது. கிழக்கில் கடல் இருப்பதால் கப்பற்படைகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போதாதக் குறைக்கு அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் பாதுகாப்பு வளையத்தில் நடக்கும் அனைத்து தகவல்களையும் இந்தியாவின் ராடார் கடற்புலிகளின் செயல்பாட்டையும் துப்பறிந்து தந்தன.
<br />சீனாவின் நவீன ரக போர் விமானங்கள் அமெரிக்கா, பிரிட்டனின் ஆயுதங்கள், இந்தியாவின் டாங்கிகள் மற்றும் விமானப்படை பயிற்சிகள் வன்னி போர்களத்தில் சிங்கள ராணுவத்திற்கு மாபெரும் உதவியாக இருந்தன. இவைதான் இறுதிகட்ட தாக்குதலின் போதான போர் சூழல். இவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட ராணுவம் மூர்க்கமாக தாக்குதல் நடத்தின. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். பாஸ்பரஸ் குண்டுகளும் ரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. தொடர் தாக்குதல்களை நடத்திக்கொண்டே, 55ஆவது டிவிஷனும் 58ஆவது டிவிஷனும் இந்திய பெருங்கடல் கடற்பகுதியில் இணைந்தன. 53ஆவது டிவிஷன் ஒசந்தி கடல்பகுதியிலிருந்து பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்றது. இந்த சமயத்தில் மக்களும் புலிகளும் பொறியில் சிக்கவைத்து ஒரு பெட்டி இருப்பதுபோல அடைக்கப்பட்டனர்.
<br />
<br />2002 அமைதி காலக்கட்டத்தில் ஏராளமான படையினர் திருமணமாகினர். ஆண் படையினர்கள், பெண் படையினர்களுக்கிடையே பல திருமணங்கள் நடைப்பெற்றன. ஏராளமானவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தன. இப்போது அவர்களெல்லாம் விடுதலைபுலிகளுடனே தங்கி இருந்தனர். இவர்கள் மீது இரக்கமற்று கனரக ஆயுதங்களை கண்மூடிதனமாக பயன்படுத்தியது சிங்கள ராணுவம். ஏராளமானவர்கள் இறந்தனர். 800 விடுதலைப்புலிகள் மிகவும் மோசமாக காயமடைந்தனர். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இதனை கண்ட புலிகளின் நெஞ்சம் தாங்கவில்லை. தனது மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர் என கண்முன்னாலேயே இறந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து நெஞ்சம் பதறினர். ஒரு வளையத்திற்குள் சிக்கவைத்து அதில் மிகவும் அடர்த்தியாக இருக்கும் மக்கள் மீது விமான தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்திய ராணுவம் உலக வரலாற்றில் உண்டென்றால் அது சிங்கள ராணுவமாகத்தான் இருக்க முடியும். இதை நடத்திய ராஜபக்ஷேவும், அவனது தம்பி கோத்தாபாய ராஜபக்ஷேவும் உலகில் மன்னிக்க முடியாத போர் குற்றவாளிகள்.
<br />
<br />
<br />விடுதலைப்புலிகளின் தலைவர் எனும் முறையில் பிரபாகரன் ஏதேனும் உடனடியாக செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். இந்த சிக்கலான சூழ்நிலை பிரபாகரனின் மன அழுத்தம் அதிகரித்திருந்தது. ஆகவே பிரபாகரன் தனது மனதை மாற்றிக் கொண்டு, கேபி என்கிற செல்வராஜா பத்மநாபன் (விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர்) பேசி மூன்றாம் தரப்பிடம் சரணடைந்து விடுகிறோம் என கேட்டுக்கொண்டார். கேபியும் அவ்வாறே அறிவித்தார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்த யோசனைக்கு உடன்பட்டன. இலங்கை அரசை புலிகளின் கருத்தை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டன. இலங்கையோ தனது நிரந்தர கூட்டாளிகளான சீனா, பாகிஸ்தானையும் சந்தர்ப்பவாதக் கூட்டாளியான இந்தியாவிடமும் சொல்லி, அதை மறுக்க சொன்னது. இந்தியாவும் தனது பங்குக்கு மேற்கத்திய நாடுகளிடம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கியது. முடிவு அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே நாடுகள் மௌனமாகின. இப்போது சிங்கள ராணுவம் தன்னை கச்சிதமாக புதுக்குடியிருப்பில் நிலை நிறுத்திக் கொண்டது.
<br />புலிகளை ஒழிக்க இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட தயாராக இல்லை. இருப்பினும் ஏற்கனவே முடியாத ஒரு நிபந்தனையை விதித்தனர். அது விடுதலைபுலிகள் மூன்றாம் தரப்பிடம் சரணடைய அனுமதிக்க மாட்டோம். ராணுவத்திடமே சரணடைய வேண்டும் என இலங்கை அரசு கூறிவிட்டது. கேபி நாங்கள் ஆயுதங்களை மௌனவிக்கிறோம் எங்களின் அமைதி பேச்சை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை என அறிக்கை விட்டார்.
<br />இந்த நேரத்தில் பிரபாகரன் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி மூன்று பிரிவுகளாக பிரிந்து செயல்படுவது, முதல் பிரிவு பிரபாகரன் உள்ளடக்கிய ஒரு குரூப் ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு நீந்திக் கடலை தாண்டி பரந்தன் - முல்லைத்தீவு ரோடு அல்லது A- 35 நெடுஞ்சாலை சென்றுவிடுவது. அதன்பிறகு வன்னிக் காடுகளில் மறைந்திருந்து இயக்கத்தை நடத்துவது.
<br />இரண்டாவது பிரிவு ராணுவத்தை தொடர்புக் கொண்டு சமாதானம் பேசி சரணடைவது. அதிலும் மிக முக்கியமாக அவசர தேவையாக படுகாயமடைந்த புலிகள், குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை செய்துகொள்வது.
<br />மூன்றாம் பிரிவு ராணுவத்துடன் அனைத்து சக்திகளையும் திரட்டி பயங்கரமாக மோதுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரண்டாவது பிரிவான அமைதி பேச்சுவார்த்தை பிரிவுக்கு விடுதலைபுலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அமைதி செயலர் டைரக்டர் புலித்தேவன் ஆகியோர் முயற்சி மேற்கொண்டார். கேபியும் ஐரோப்பிய தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் கேட்டுக்கொள்ள, அவர்களும் கொழும்பை தொடர்புக் கொண்டு விடுதலைப்புலிகளின் கோரிக்கையை கூறினர். மறுபுறம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் ராணுவ செயலர் கோதாபாய ராஜபக்ஷேவிடம் புலிகள் சரணடைவதைப் பற்றி வேண்டினார். அதனை
<br />பரிசீலித்த ராணுவ செயலகம் புலிகள் வெள்ளை கொடிகளை கையில் பிடித்துக் கொண்டு வெளிப்படையாக வரவேண்டுமென தெரிவித்தது. புலிகளும் இதனை ஓப்புக் கொண்டனர். அதன்படியே நடேசன், புலித்தேவன், விசித்திரா (நடேசனின் மனைவி. இவர் ஒரு சிங்கள பெண்மணி). உடன் ஏழு சிங்கள பிணைக் கைதிகள் (கப்பல்படை பிரிவினர்) மற்றும் இவர்களுடன் 35 புலிகளும் வெள்ளை கொடியை பிடித்தவாறு வெளியே வந்தனர்.
<br />முள்ளி வாய்க்கால் பகுதியில் நடேசன் தலைமையில் சரணடைய வந்திருந்த புலிகளையும் நடேசன் மற்றும் அவரது மனைவியையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக சுட்டுக் கொன்றது ராணுவம். நடேசனின் கையிலிருந்த வெள்ளைக்கொடி ரத்தத்தால் சிவப்பானது. சரணடைய சென்றவர்களை சுட்டுக்கொன்றது யுத்த தர்மத்தையே மீறிய செயல். இதற்கு நிச்சயம் சிங்கள அரசு என்றாவது ஒருநாள் இதற்கான விலையை கொடுத்தே தீரும்.
<br />நடேசன் கொல்லப்பட்டதை அறிந்த பிரபாகரன் மூர்க்கமான கோபம் கொண்டார். இனி எல்லாம் முடிந்தது. அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராவோம் என கட்டளையிட்டார்.
<br />
<br />
<br />மே 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. பிரபாகரனுக்கு சூன்யமான நாள். விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் 8 நியூமராலஜிபடி (8, 17, 26) தேதிகளில் பெருத்த பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். எட்டாவது எண் அதிர்ஷ்டம் இல்லாத நாளென பிரபாகரன் கருதி வந்தார். துரதிர்ஷ்டமான அந்த 17ஆம் தேதிதான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. மூன்று திசைகளிலும் தாக்குதல் நடந்தது. முக்கியமாக 53ஆவது டிவிஷன் நந்தி கடலிலிருந்து தாக்குதலை நடத்தி முன்னேறிக்கொண்டு வந்தது. 55, 58ஆவது டிவிஷன் படைகளும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின.
<br />இந்த உச்சக்கட்ட தாக்குதலை பானு தலைமையில் உக்கிரமான ஊடறுப்பு தாக்குதலை நடத்தி ராணுவ முற்றுகையை உடைத்தனர். இன்னொரு பிரிவு ஜெயம் தலைமையிலும், மற்றொன்று பொட்டு அம்மன் தலைமையிலும், பிரதியொன்று சூசை தலைமையிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. மூன்று பிரிவுகளிலும் 200லிருந்து 300 வரையிலான புலிகள் இடம் பெற்றிருந்தனர். ஏறக்குறைய அனைத்து புலிகள் தலைவரும் ஊடறுப்பு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவு சரணடைய முயன்றது.
<br />53ஆவது டிவிஷனில் அலை அலையாக வந்து தற்கொலை படை தாக்குதலை நடத்தினர். ராணுவத்தினர் மீது எகிறி விழுந்து வெடித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணுவத்தினர் பெருமளவில் கொல்லப்பட, ராணுவ வளையத்தில் இடைவெளி ஏற்பட்டது. இதை உணர்ந்து ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் பின்பக்கம் குவிந்திருந்தது புலிகளின் துரதிர்ஷ்டம். அதனால் ராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலை உடனே சரி செய்து கொண்டனர். புலிகள் தீவிர தாக்குதல் நடத்தி ராணுவ முற்றுகையை உடைத்து உள்ளே புகுந்தபோது அந்த இடைவெளியிலேயே இரண்டு படைகளையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின. இதனால் புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. நிறைய புலிகள் ராணுவ வளையத்திற்குள் மாட்டிக்கொண்டனர். பலர் சயனைட் குப்பிகளை கடித்து இறந்தனர். சார்லஸ் ஆண்டனி பிரபாகரனின் மகன் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
<br />
<br />கேணல் சூசை (கடற்படை பிரிவின் தலைவர்) தலைமையில் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி வெளியேறி வெற்றியடைந்தனர். சூசையின் பிரிவில்தான் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி, மகள் துவாரகா (23), இளைய மகள் பாலச்சந்திரன் (11) இருந்தனர். துவாரகா முதலில் மாலதி படைபிரிவிலிருந்து போராடினார். பின்னர் தந்தையுடன் சேர்ந்துக் கொண்டார். பிரபாகரன் குடும்பத்தினர் நால்வருடன் மற்ற 47 பேரும் நந்திக் கடல் ராணுவ வளையத்தை ஊடுருவி சென்றனர். அதே சமயம் முள்ளி வாய்க்காலில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த புலிகள் பிரிவுக்கு தாங்கள் ஊடறுத்து சென்றுவிட்டதாக தகவல் தரப்பட்டது. இந்த தகவல் கேபிக்கு தெரிவிக்கப்பட்டது. பிரபாகரனுடன் சேர்த்து ஐம்பத்தியென்று நபர்கள் கொண்ட குழு காடுகளில் தங்கியிருந்து திட்டத்தின்படி வன்னிக் காட்டுக்கு செல்வதாக இருந்தனர்.
<br />சூசை, பொட்டு அம்மன் உட்பட அனைவரும் இறந்ததாக ராணுவம் அறிவித்தது.
<br />
<br />பிரபாகரனுக்கு அவரது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாத நாளான மே 17ஆம் தேதி சிங்கள ராணுவம் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தது. ஆனால் பிரபாகரனின் உடலை காட்டவில்லை. உலகின் முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் யாரும் இதை நம்பவில்லை. சிங்கள் நாய்களின் எடுபிடிகளை தவிர.
<br />பிரபாகரன் உடல் எங்கே என சிங்கள ராணுவத்திடம் கேட்டதற்கு வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டபோது தமிழ்நாடு அதிரடி படை தலைவர் விஜயகுமார் சொன்ன கதையை சிங்களவனும் சொன்னது ஆச்சர்யமான விஷயம். ஆம்புலன்சில் ஏறி பிரபாகரன் தப்பியதாகவும் அதனை தெரிந்துக் கொண்ட ராணுவத்தினர் முற்றுகையிட்டு, ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் உடல் கருகி இறந்துவிட்டார் என கதைவிட்டனர். இந்த கதையை சர்வதேச மீடியாக்களில் கூறினார் ராணுவ பேச்சாளர் உதய நாணயகாரா. ஆனால் ராணுவத்தின் தலைமைக்கு பிரபாகரன் தப்பிவிட்டார் என நன்றாகவே தெரியும். தெரிந்தும் அடர்ந்த காடுகளில் தேடிக்கொண்டிருந்தனர்.
<br />
<br />மே 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இலங்கை பாரளுமன்றத்தில் ராஜபக்ஷே "தீவிரவதத்திற்கான போரில் வென்றுவிட்டோம். விடுதலைப்புலிகளை தோற்கடித்து விட்டோம்' என பேசிக் கொண்டிருந்த அதே வேளையில், நந்தி கடல் ஒட்டிய காட்டுக்குள் விஜயபாகு என்ற நான்காவது டிவிஷன் வீரன் ஒருவன் நெற்றியில் வெட்டப்பட்ட பிரபாகரனை போன்ற தோற்றம் கொண்ட பிணத்தை பார்த்தான். அதனை தனது பிரிவு தலைவர் லெப்டினன்ட் கர்னல் ரோகிதா அலுவிகரேவிடம் தெரிவித்தான். இந்த செய்தியினை ராணுவ தலைமையிடம் தெரிவிக்க, சிங்கள சேனல்கள் அடுத்து உலக சேனல்கள் திரும்ப திரும்ப பிரபாகரன் இறந்துவிட்டார் என காட்டியது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையாவென காலம் பதில் சொல்லட்டும்.
<br />
<br />
<br />எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-28031248986141881892008-10-01T02:16:00.000-07:002008-10-01T02:35:43.193-07:00அக்டோபர் 2-ம்தேதி முதல் புகைபிடிக்க தடை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifSGJA1noDj7ddSRAEOf_HbEFd4ZVjuTFSjo7GXlFUK6lutx1QpG5CXD1kZuswnhaL1OHb2MXvmhyikgm3RAiZ6dj78CGQGLOrYhdco_G3jA5OkyMH94FmgMOGuYH9fu1SdxzEBzyuK60/s1600-h/W5M5OCAEENANOCAUW4PM1CA2S63QHCA7Q88A1CAMDLZU0CARIKM35CA6J80VJCA13VFHMCA2CXBMECABR6JOBCA4BR25PCAVMLCJ3CA33Y2E4CA63CCHTCARPM8NUCAQGIWN4CAX2DBJGCA3QP00ECANAOX3Y.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5252116443113669970" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifSGJA1noDj7ddSRAEOf_HbEFd4ZVjuTFSjo7GXlFUK6lutx1QpG5CXD1kZuswnhaL1OHb2MXvmhyikgm3RAiZ6dj78CGQGLOrYhdco_G3jA5OkyMH94FmgMOGuYH9fu1SdxzEBzyuK60/s320/W5M5OCAEENANOCAUW4PM1CA2S63QHCA7Q88A1CAMDLZU0CARIKM35CA6J80VJCA13VFHMCA2CXBMECABR6JOBCA4BR25PCAVMLCJ3CA33Y2E4CA63CCHTCARPM8NUCAQGIWN4CAX2DBJGCA3QP00ECANAOX3Y.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7mGzO1dm8gUrEZ5yF2PPb3X_TgbxgOysDtMFtJyesk-Sa4N1ztDFMRDNWjffR9BDNYjTyEGCjPdce4O7oSSrYuAe_S5wyydUAnDIJZc7YaWHLbbzpV7WnSbC5ULhvPj-GHCpCmjimCcI/s1600-h/Q6DSCCAS9D0M1CAB9FYY8CAB0MRUPCASIEMYXCAIU547LCAIP9BZSCAZQSYDGCACJTWFRCAP3BTL3CAG9FUS8CACQQKI8CA43LQPFCA1JGD6GCA5TN8W1CA8SSP09CAO2J191CAYS6YYQCAPA3BLRCAVOVS7C.jpg"></a><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEUb5NTvjepoi7aAWJBGoDOYzhHutd9k5a3XzsUNIc4CSDNl6G01hNi14j4QZ3rHgu9buF-yg81D00s1qqSbAW84D4i1IquqpG_MFyYAq997VLY-XAoDl9ajn5czSoDsAh08_00QQak34/s1600-h/images%5B4%5D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5252115829479345954" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEUb5NTvjepoi7aAWJBGoDOYzhHutd9k5a3XzsUNIc4CSDNl6G01hNi14j4QZ3rHgu9buF-yg81D00s1qqSbAW84D4i1IquqpG_MFyYAq997VLY-XAoDl9ajn5czSoDsAh08_00QQak34/s320/images%5B4%5D.jpg" border="0" /></a><div>காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம்தேதி முதல் நாடு முழுவதும் புகைபிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிறப்பித்துள்ளார்.<br /><br />மத்திய கலால், வருமான வரி, விற்பனை வரி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் யார் புகைபிடித்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.<br /><br />ரயில் நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் ரயில் நிலைய அதிகாரிகள், துணை நிலைய அதிகாரி, தலைமை நிலைய அதிகாரி, நிலைய பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.<br /><br />அரசு அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் நிலையங்களில் தபால் நிலைய அதிகாரிகள், தனியார் அலுவலகங்களில் தலைமை நிலைய அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், கல்வி நிலையங்களில் கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.<br /><br />நூலகங்கள், வாசகர் அறைகளில் நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், விமான நிலையங்களில் விமான நிலைய மேலாளர்கள், அதிகாரிகள், அனைத்து பொது இடங்களிலும் பொது சுகாதாரத் துறை இயக்குநர்கள், மத்திய, மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலைக் கட்டுப்பாடு மாநில, மாவட்ட நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தமது செய்தியில் தெரிவித்துள்ளார். </div></div></div>எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3596463292897742896.post-29019707857056462452008-06-12T01:32:00.000-07:002008-06-12T01:58:57.062-07:00கவலைக்கிடமான நிலையில் அணுசக்தி ஒப்பந்தம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjNADthmsT89Y4gtedOg8YRwg7N0G-YwS5ngV556MS3HBe-a6FeNGo6Dj0cUz0p6RJVOlhMgYIU0bpDae_99ihE-3HneUnZ3y0180MPnl42vdPs1zLV1F9_xidR2GgfO_QfdIL2qQ4Zbo/s1600-h/images%5B4%5D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5210912719229221426" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjNADthmsT89Y4gtedOg8YRwg7N0G-YwS5ngV556MS3HBe-a6FeNGo6Dj0cUz0p6RJVOlhMgYIU0bpDae_99ihE-3HneUnZ3y0180MPnl42vdPs1zLV1F9_xidR2GgfO_QfdIL2qQ4Zbo/s320/images%5B4%5D.jpg" border="0" /></a>அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற உள்நாட்டு அரசியல் தடுக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் வருத்தத்துடன் கூறியுள்ளார்.<br /><br />அயல்நாட்டு பணிக்கு நியமிக்கப்பட்ட இந்திய அதிகாரிகளை தனது வீட்டில் சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:<br /><br />அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது தேச நலன் காக்கப்பட்டுள்ளது. நமது பாதுகாப்புக்காக அணு சக்தியைப் பயன்படுத்த அந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு நிறைவேற்ற நமது உள்நாட்டு அரசியல் தடுக்கிறது. இனி வரும் மாதங்களில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.<br /><br />அணு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான எரிபொருளை மற்ற நாடுகள் இந்தியாவுக்குத் தருவதில்லை. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே மற்ற நாடுகளிடம் இருந்து எரிபொருளை வாங்க முடியும். எனவேதான் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.<br /><br />பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ரஷியா, பிரான்ஸ் போன்ற அணுசக்தி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் நாடுகளுடனும் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.<br /><br />எண்ணெய் வளம்:<br /><br />உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் எண்ணெய் வளம் முக்கிய பங்கு வகிக்கும். எண்ணெய் வளம் இருக்கும் நாடுகளைத் தேடி சீனா செல்கிறது. அந்த போட்டியில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிக்க அங்கெல்லாம் சீனா முதலீடு செய்கிறது.<br /><br />எண்ணெய் வளத்தை பெறுவதும், உலகின் அதிகாரப் போட்டிகளில் மிக முக்கியமானதாகிவிடும். இப்போது கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதுபோன்ற சிக்கலை உலக நாடுகள் இதுவரை சந்தித்ததில்லை. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் எண்ணெய் வளத்தைப் பெறுவதற்காக நாடுகளிடையே கடும் போட்டி அதிகரிக்கும். இயற்கை வளம், எண்ணெய் வளம், மின்சாரம் ஆகியவை வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக அமையும்.<br /><br />எரிசக்தி துறையில் சீனாவிடம் இருந்து இந்தியாவுக்குக் கடும் போட்டி ஏற்படும் என்பதை உணர வேண்டும். வளர்ச்சிக்கான போட்டியில், தேச நலனை நாம் எப்படி காத்துக் கொள்ளப் போகிறோம் என்பது அவசியம் என்றார் மன்மோகன் சிங்.<br /><br />ஆனால் அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் விடுவதாக இல்லை. அமெரிக்கா நம்பத் தகுந்த நாடு கிடையாது என்று அக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த ஒப்பந்தம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.எஸ்.ஆர்.மைந்தன்.http://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.com0