Wednesday, October 1, 2008

அக்டோபர் 2-ம்தேதி முதல் புகைபிடிக்க தடை


காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம்தேதி முதல் நாடு முழுவதும் புகைபிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிறப்பித்துள்ளார்.

மத்திய கலால், வருமான வரி, விற்பனை வரி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் யார் புகைபிடித்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.

ரயில் நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் ரயில் நிலைய அதிகாரிகள், துணை நிலைய அதிகாரி, தலைமை நிலைய அதிகாரி, நிலைய பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் நிலையங்களில் தபால் நிலைய அதிகாரிகள், தனியார் அலுவலகங்களில் தலைமை நிலைய அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், கல்வி நிலையங்களில் கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

நூலகங்கள், வாசகர் அறைகளில் நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், விமான நிலையங்களில் விமான நிலைய மேலாளர்கள், அதிகாரிகள், அனைத்து பொது இடங்களிலும் பொது சுகாதாரத் துறை இயக்குநர்கள், மத்திய, மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலைக் கட்டுப்பாடு மாநில, மாவட்ட நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.

2 comments:

Robin said...

புகைபிடிப்பது புகைபிடிப்பவரை மட்டுமின்றி சுற்றிலும் இருப்பவர்களையும் பாதிக்கிறது. பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்திருப்பது நல்ல முடிவு. ஒட்டு மொத்தமாக புகையிலை கம்பெனிகளை மூடுவதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் தேவைதான். இதை முறைதவறி பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது முக்கியம். அப்படிப்பட்ட பொது இடங்களில் புகைப்பிடிக்க அனுமதில்லை என்ற பலகை பெரிதாகவும் எல்லோருடைய பார்வை படும்படியும் இருப்பது மிக முக்கியம்.. நம்நாட்டில் இன்னும் சட்டத்தை மதிக்கும் பண்பு குறைவாகதான் உள்ளது. அதேபோல் சட்டத்தை முறைதவறி தன் சுய பகைக்காக பயன்படுத்துவதும் முறைகேடன விடயம்..... இதை கருத்தில் கொண்டு செயல்ப்பட்டால் நன்றாகவும் பயன்படும்படியும் இருக்கும்